ஈரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் – போர் பதற்றம் அதிகரிப்பு!
Jul 27, 2025, 04:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் – போர் பதற்றம் அதிகரிப்பு!

Web Desk by Web Desk
Jan 18, 2024, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழல் உருவாகி உள்ளது.

பாகிஸ்தானை தலமாகக் கொண்டு பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்த தீவிரவாத அமைப்புகள் உலகின் பல நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அண்டை நாடுகளுக்குள் புகுந்து பல அசம்பாவித சம்பவங்களை இந்த தீவிரவாத அமைப்புகள் செய்து வருகிறது.

அந்தவகையில், பாகிஸ்தானை தலமாகக் கொண்டு இயங்கி வரும், ஜெய்ஸ் அல் அடில் என்ற தீவிரவாத அமைப்பு ஈரானுக்கு பல அச்சுறுத்தல்களைக் கொடுத்து வந்தது. ஈரானின் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து தாக்குதலையும் நடத்தி வந்தது.

இதனை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை, பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஸ் அல் அடில் என்ற தீவிரவாத அமைப்பு தொடர்புடைய இரண்டு இடங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. ஏற்கனவே, ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள தீவிரவாத இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்திய நிலையில், பாகிஸ்தானின் உள்ள தீவிரவாத அமைப்பைக் குறிவைத்தும் ஈரான் சரமாரி தாக்குதலை நடத்தி உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானில் உள்ள பலுச் பிரிவினைவாத முகாம்களைக் குறிவைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால், ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

இதற்கிடையே, பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜெய்ஷ்வால் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இது ஈரானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்னை. இதில், இந்தியாவைப் பொறுத்த வரையில், தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ளாது. மேலும், நாடுகள் தங்கள் தற்காப்புக்காக எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags: Pakistan attack on Iran - increase in war tension!iran attack pakistan
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: தீர்வுகாண இந்தியாவிடம் ஈரான் கோரிக்கை!

Next Post

அயோத்தி ராமர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது – ஸ்ரீரங்கம் கோவில் தலைமை அர்ச்சகர்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies