இஸ்ரேல் - ஹமாஸ் போர்: தீர்வுகாண இந்தியாவிடம் ஈரான் கோரிக்கை!
Jun 11, 2026, 04:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: தீர்வுகாண இந்தியாவிடம் ஈரான் கோரிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 18, 2024, 01:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான் சென்றிருக்கும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் ரெய்சி, இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வர உதவும்படி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதற்கு, அன்றிலிருந்து இன்றுவரை இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

அதேசமயம், இப்போரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான் நாடு ஆதரவு தெரிவித்திருக்கிறது. எனவே, அந்நாட்டின் ஆதரவு பெற்ற ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேலுக்குச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் மற்றும் சரக்குக் கப்பல்கள் மீது செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இத்தாக்குதலில் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் கப்பல்கள் சேதமடைந்தன. ஆகவே, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். எனினும், எச்சரிக்கையையும் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் ஹௌதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈரானுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உள்ளிட்டோரை ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு குறித்து பேசிய ஜெய்சங்கர், “செங்கடல் பகுதி நிலவரம் பன்முகத்தன்மை கொண்டது. கடற்கொள்ளையர்கள் பிரச்சனை, ஏவுகணை தாக்குதல் ஆகியவை முக்கியமான மற்றும் தீவிரமான பிரச்சனை.

செங்கடல் வழியாக இயக்கப்படும் சரக்குக் கப்பல்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்திருக்கின்றன. இதனால், இந்தியாவுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.

அதேபோல, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “இந்தியா – ஈரான் இடையேயான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்திருக்கிறோம். காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களை நிறுத்தி, மனிதநேய அடிப்படையில் பாலஸ்தீனியர்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும்.

அந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலவ வேண்டும். இந்த விஷயத்தில் தலையிட்டு தகுந்த தீர்வு காண்பதில் இந்தியா முக்கியப் பங்காற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

Tags: to stopIndiaisrael hamas warIranrequest
ShareTweetSendShare
Previous Post

பட்டியல் சமூக இளம் பெண்ணை தாக்கிய திமுக எம். எல். ஏ., மகன்! – அண்ணாமலை கடும் கண்டனம்

Next Post

ஈரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் – போர் பதற்றம் அதிகரிப்பு!

Related News

தமிழ் ஜனம் உள்ளிட்ட செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? – எல்.முருகன் கண்டனம்!

நமது சிந்தனையை சிதறடிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெறுகிறது – காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார்

இந்தியாவின் நீண்டகால பிரதமர் சாதனை – மோடிக்கு எல்.முருகன் வாழ்த்து!

குழந்தைகள் மற்றும் பெண்களை தரக்குறைவாக பேசிய விவகாரம் – தலைவறைவாக இருந்த யூடியூபர் முக்தார் அகமது கைது!

நீண்டகால பிரதமர் என்ற சாதனை – மோடிக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து!

இந்தியாவின் நீண்ட கால பிரதமர் – நேருவின் சாதனையை முறியடித்தார் நரேந்திர மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் விஜய், ஸ்டாலின், இளையராஜா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி!

அது எப்படி அவர்களுக்கு மட்டும் தொழில்நுட்ப பிரச்னை வரும் – அண்ணாமலை கேள்வி!

என் இனிய தமிழ் மக்களே….பாரதி ராஜா கடந்து வந்த பாதை!

அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து 3 சேனல்கள் நீக்கம் என்ற செய்தி தவறானது – அமைச்சர் ராஜ்மோகன்

இண்டி கூட்டணியில் தற்போது சேருவதில்லை – தவெக முடிவு?

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு – தலைவர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல்!

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பற்காக இன்று டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

சென்னை துறைமுகத்தில் இருந்து நச்சு வாயு கசிந்த விவகாரம்; தமிழக அரசுக்கு உத்தரவு

டெல்லி செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய்; நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்

அமைச்சர் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற தவெக நிர்வாகிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies