இஸ்ரேல் - ஹமாஸ் போர்: தீர்வுகாண இந்தியாவிடம் ஈரான் கோரிக்கை!
Sep 10, 2026, 01:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: தீர்வுகாண இந்தியாவிடம் ஈரான் கோரிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 18, 2024, 01:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரான் சென்றிருக்கும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் ரெய்சி, இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வர உதவும்படி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதற்கு, அன்றிலிருந்து இன்றுவரை இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

அதேசமயம், இப்போரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான் நாடு ஆதரவு தெரிவித்திருக்கிறது. எனவே, அந்நாட்டின் ஆதரவு பெற்ற ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேலுக்குச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் மற்றும் சரக்குக் கப்பல்கள் மீது செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இத்தாக்குதலில் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் கப்பல்கள் சேதமடைந்தன. ஆகவே, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். எனினும், எச்சரிக்கையையும் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் ஹௌதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈரானுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உள்ளிட்டோரை ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு குறித்து பேசிய ஜெய்சங்கர், “செங்கடல் பகுதி நிலவரம் பன்முகத்தன்மை கொண்டது. கடற்கொள்ளையர்கள் பிரச்சனை, ஏவுகணை தாக்குதல் ஆகியவை முக்கியமான மற்றும் தீவிரமான பிரச்சனை.

செங்கடல் வழியாக இயக்கப்படும் சரக்குக் கப்பல்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்திருக்கின்றன. இதனால், இந்தியாவுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.

அதேபோல, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “இந்தியா – ஈரான் இடையேயான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்திருக்கிறோம். காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களை நிறுத்தி, மனிதநேய அடிப்படையில் பாலஸ்தீனியர்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும்.

அந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலவ வேண்டும். இந்த விஷயத்தில் தலையிட்டு தகுந்த தீர்வு காண்பதில் இந்தியா முக்கியப் பங்காற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

Tags: to stopIndiaisrael hamas warIranrequest
Share
Tweet
SendShare
Previous Post

பட்டியல் சமூக இளம் பெண்ணை தாக்கிய திமுக எம். எல். ஏ., மகன்! – அண்ணாமலை கடும் கண்டனம்

Next Post

ஈரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் – போர் பதற்றம் அதிகரிப்பு!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies