இஸ்ரேல் - ஹமாஸ் போர்: தீர்வுகாண இந்தியாவிடம் ஈரான் கோரிக்கை!
Aug 1, 2025, 06:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: தீர்வுகாண இந்தியாவிடம் ஈரான் கோரிக்கை!

Web Desk by Web Desk
Jan 18, 2024, 01:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான் சென்றிருக்கும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் ரெய்சி, இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வர உதவும்படி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதற்கு, அன்றிலிருந்து இன்றுவரை இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

அதேசமயம், இப்போரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான் நாடு ஆதரவு தெரிவித்திருக்கிறது. எனவே, அந்நாட்டின் ஆதரவு பெற்ற ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேலுக்குச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் மற்றும் சரக்குக் கப்பல்கள் மீது செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இத்தாக்குதலில் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் கப்பல்கள் சேதமடைந்தன. ஆகவே, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். எனினும், எச்சரிக்கையையும் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் ஹௌதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈரானுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உள்ளிட்டோரை ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு குறித்து பேசிய ஜெய்சங்கர், “செங்கடல் பகுதி நிலவரம் பன்முகத்தன்மை கொண்டது. கடற்கொள்ளையர்கள் பிரச்சனை, ஏவுகணை தாக்குதல் ஆகியவை முக்கியமான மற்றும் தீவிரமான பிரச்சனை.

செங்கடல் வழியாக இயக்கப்படும் சரக்குக் கப்பல்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்திருக்கின்றன. இதனால், இந்தியாவுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.

அதேபோல, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “இந்தியா – ஈரான் இடையேயான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்திருக்கிறோம். காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களை நிறுத்தி, மனிதநேய அடிப்படையில் பாலஸ்தீனியர்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும்.

அந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலவ வேண்டும். இந்த விஷயத்தில் தலையிட்டு தகுந்த தீர்வு காண்பதில் இந்தியா முக்கியப் பங்காற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

Tags: Indiaisrael hamas warIranrequestto stop
ShareTweetSendShare
Previous Post

பட்டியல் சமூக இளம் பெண்ணை தாக்கிய திமுக எம். எல். ஏ., மகன்! – அண்ணாமலை கடும் கண்டனம்

Next Post

ஈரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் – போர் பதற்றம் அதிகரிப்பு!

Related News

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே பேருந்து திடீரென நின்றதில் சாலையில் வீசப்பட்ட கை குழுந்தை!

பீகாரின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

குஜராத் : மருத்துவ உபகரணங்கள் மிகுந்த பலனளிப்பதாக மக்கள் கருத்து!

தமிழகத்தில் நிலம் கிடைக்காததால் 5 ரயில்வே திட்டங்கள் தாமதம் : அஸ்வினி வைஷ்ணவ்

தூத்துக்குடியில் காணாமல்போன சகோதரர்கள் காட்டுப் பகுதியில் சடலமாகக் மீட்கப்பட்டதால் பெரும் பரபரப்பு!

ஹரியானா மாநிலத்தில் மாரடைப்பால் உயிரிழந்த டெலிவரி ஊழியர்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது : ஆதி திராவிடர் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர்!

பீகாரில் ஊழியர்களை தாக்கிய எம்எல்ஏ மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டம்!

அரசியல் கொள்ளைக்கு கோயிலும் தப்பவில்லை : அண்ணாமலை

காவல் அதிகாரிக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் கைது செய்யப்பட்ட ரவுடிகள் – அதிர்ச்சி வீடியோ!

தெலங்கானாவில் 8ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த ஆசிரியர் – 4 பேர் மீது வழக்குப்பதிவு!

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு!

குஜராத் : தீப்பற்றி எரிந்த கனரக லாரி – போக்குவரத்து பாதிப்பு!

டெல்லி : கடற்படைத் துணைத் தளபதியாக சஞ்சய் வத்சாயன் பொறுப்பேற்பு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி : இந்திய தேர்தல் ஆணையம்

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies