இராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இன்டெகாப் அலாம் கைது!
Oct 6, 2025, 01:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இன்டெகாப் அலாம் கைது!

Web Desk by Web Desk
Jan 22, 2024, 09:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று மதியம் நடைபெறவிருக்கும் நிலையில், இராமர் கோவிலை குண்டு வைத்துத் தகர்ப்பதாக மிரட்டல் விடுத்த இன்டெகாப் அலாம் என்கிற நபரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா மற்றும் இராம் லல்லா சிலை பிரதிஷ்டை விழா ஆகியவை இன்று மதியம் 12.20 மணி முதல் 1 மணிக்குள் நடைபெறவிருக்கிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்கிறார். இதையொட்டி, நாடு முழுவதிலும் இருந்து சுமார் 8,000 வி.வி.ஐ.பி.க்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். ஆகவே, அயோத்தி நகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த சூழலில், அயோத்தி கோவிலை வெடிகுண்டு வைத்துத் தகர்ப்பேன் என்று மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அதாவது, பொதுமக்கள் அவசர உதவிக்காக அழைக்கும் காவல்துறையின் 112 எண்ணுக்கு ஒரு மர்ம அழைப்பு வந்திருக்கிறது.

மறுமுனையில் பேசிய நபர், தனது பெயர் சோட்டா ஷகீல் என்றும், தான் தாவூத் இப்ராஹிமுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் அயோத்தி கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்பேன் என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்து, மர்ம தொலைபேசி அழைப்பில் பேசிய நபரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். போலீஸ் விசாரணையில், அந்த நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து பீகார் மாநிலம் அராரியா மாவட்ட எஸ்.பி. அசோக் குமார் சிங் கூறுகையில், “ஜனவரி 19-ம் தேதி மர்ம நபர் ஒருவர், பொதுமக்கள் அவசர உதவி கோர பயன்படுத்தும் 112 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்து, தனது பெயர் சோட்டா ஷகீல் என்றும், தான் தாவூத் இப்ராஹிமுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறினார்.

மேலும், ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் அயோத்தி இராமர் கோவிலை வெடிக்கச் செய்வேன் என்றும் மிரட்டல் விடுத்தார். பின்னர், அந்த அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை செய்து, அந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

அந்த நபர், பீகார் மாநிலத்தின் அராரியா மாவட்டத்தை சேர்ந்த இன்டெகாப் அலாம்.  21 வயதாகும் இவர் மீது எந்த குற்றப் பின்னணியும் இல்லை. அதேசமயம் மனநலம் பாதிக்கப்பட்டவரைப் போல தெரிகிறார்” என்று கூறினார்.

Tags: ArrestBiharRam TempleAyodyaBomb Thread
ShareTweetSendShare
Previous Post

தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் அனைவரும் தங்கள் வீடுகளில் முன் தீபம் ஏற்றி கொண்டாடுங்கள்! – ஆளுநர் ரவி வேண்டுகோள்

Next Post

சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவு – ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை!

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies