இராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இன்டெகாப் அலாம் கைது!
Aug 21, 2025, 04:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இன்டெகாப் அலாம் கைது!

Web Desk by Web Desk
Jan 22, 2024, 09:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று மதியம் நடைபெறவிருக்கும் நிலையில், இராமர் கோவிலை குண்டு வைத்துத் தகர்ப்பதாக மிரட்டல் விடுத்த இன்டெகாப் அலாம் என்கிற நபரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா மற்றும் இராம் லல்லா சிலை பிரதிஷ்டை விழா ஆகியவை இன்று மதியம் 12.20 மணி முதல் 1 மணிக்குள் நடைபெறவிருக்கிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்கிறார். இதையொட்டி, நாடு முழுவதிலும் இருந்து சுமார் 8,000 வி.வி.ஐ.பி.க்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். ஆகவே, அயோத்தி நகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த சூழலில், அயோத்தி கோவிலை வெடிகுண்டு வைத்துத் தகர்ப்பேன் என்று மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அதாவது, பொதுமக்கள் அவசர உதவிக்காக அழைக்கும் காவல்துறையின் 112 எண்ணுக்கு ஒரு மர்ம அழைப்பு வந்திருக்கிறது.

மறுமுனையில் பேசிய நபர், தனது பெயர் சோட்டா ஷகீல் என்றும், தான் தாவூத் இப்ராஹிமுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் அயோத்தி கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்பேன் என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்து, மர்ம தொலைபேசி அழைப்பில் பேசிய நபரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். போலீஸ் விசாரணையில், அந்த நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து பீகார் மாநிலம் அராரியா மாவட்ட எஸ்.பி. அசோக் குமார் சிங் கூறுகையில், “ஜனவரி 19-ம் தேதி மர்ம நபர் ஒருவர், பொதுமக்கள் அவசர உதவி கோர பயன்படுத்தும் 112 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்து, தனது பெயர் சோட்டா ஷகீல் என்றும், தான் தாவூத் இப்ராஹிமுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறினார்.

மேலும், ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் அயோத்தி இராமர் கோவிலை வெடிக்கச் செய்வேன் என்றும் மிரட்டல் விடுத்தார். பின்னர், அந்த அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை செய்து, அந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

அந்த நபர், பீகார் மாநிலத்தின் அராரியா மாவட்டத்தை சேர்ந்த இன்டெகாப் அலாம்.  21 வயதாகும் இவர் மீது எந்த குற்றப் பின்னணியும் இல்லை. அதேசமயம் மனநலம் பாதிக்கப்பட்டவரைப் போல தெரிகிறார்” என்று கூறினார்.

Tags: BiharRam TempleAyodyaBomb ThreadArrest
ShareTweetSendShare
Previous Post

தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் அனைவரும் தங்கள் வீடுகளில் முன் தீபம் ஏற்றி கொண்டாடுங்கள்! – ஆளுநர் ரவி வேண்டுகோள்

Next Post

சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவு – ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை!

Related News

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies