இராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இன்டெகாப் அலாம் கைது!
Jun 15, 2026, 02:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இன்டெகாப் அலாம் கைது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 22, 2024, 09:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று மதியம் நடைபெறவிருக்கும் நிலையில், இராமர் கோவிலை குண்டு வைத்துத் தகர்ப்பதாக மிரட்டல் விடுத்த இன்டெகாப் அலாம் என்கிற நபரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா மற்றும் இராம் லல்லா சிலை பிரதிஷ்டை விழா ஆகியவை இன்று மதியம் 12.20 மணி முதல் 1 மணிக்குள் நடைபெறவிருக்கிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்கிறார். இதையொட்டி, நாடு முழுவதிலும் இருந்து சுமார் 8,000 வி.வி.ஐ.பி.க்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். ஆகவே, அயோத்தி நகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த சூழலில், அயோத்தி கோவிலை வெடிகுண்டு வைத்துத் தகர்ப்பேன் என்று மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அதாவது, பொதுமக்கள் அவசர உதவிக்காக அழைக்கும் காவல்துறையின் 112 எண்ணுக்கு ஒரு மர்ம அழைப்பு வந்திருக்கிறது.

மறுமுனையில் பேசிய நபர், தனது பெயர் சோட்டா ஷகீல் என்றும், தான் தாவூத் இப்ராஹிமுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் அயோத்தி கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்பேன் என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்து, மர்ம தொலைபேசி அழைப்பில் பேசிய நபரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். போலீஸ் விசாரணையில், அந்த நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து பீகார் மாநிலம் அராரியா மாவட்ட எஸ்.பி. அசோக் குமார் சிங் கூறுகையில், “ஜனவரி 19-ம் தேதி மர்ம நபர் ஒருவர், பொதுமக்கள் அவசர உதவி கோர பயன்படுத்தும் 112 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்து, தனது பெயர் சோட்டா ஷகீல் என்றும், தான் தாவூத் இப்ராஹிமுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறினார்.

மேலும், ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் அயோத்தி இராமர் கோவிலை வெடிக்கச் செய்வேன் என்றும் மிரட்டல் விடுத்தார். பின்னர், அந்த அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை செய்து, அந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

அந்த நபர், பீகார் மாநிலத்தின் அராரியா மாவட்டத்தை சேர்ந்த இன்டெகாப் அலாம்.  21 வயதாகும் இவர் மீது எந்த குற்றப் பின்னணியும் இல்லை. அதேசமயம் மனநலம் பாதிக்கப்பட்டவரைப் போல தெரிகிறார்” என்று கூறினார்.

Tags: ArrestBiharRam TempleAyodyaBomb Thread
ShareTweetSendShare
Previous Post

தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் அனைவரும் தங்கள் வீடுகளில் முன் தீபம் ஏற்றி கொண்டாடுங்கள்! – ஆளுநர் ரவி வேண்டுகோள்

Next Post

சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவு – ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies