சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவு – ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை!
Jun 14, 2026, 01:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவு – ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை!

Murugesan M by Murugesan M
Jan 22, 2024, 09:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வந்த, 47-வது புத்தகக் கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், சுமார்18 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் ஆண்டுதோறும் பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, வாசகர்கள், பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருப்பது, சென்னை புத்தகக் கண்காட்சிக்காக தான்.

இந்த ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி கடந்த 3-ஆம் தேதி, சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கியது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதல் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, விரும்பிப் படிக்கும் சிறுகதைகள், நாவல்கள், இலக்கிய – இலக்கண நூல்கள், வாழ்க்கை வரலாறு, கவிதைகள் தொடர்பான புத்தகங்கள் என பல்வேறு புத்தகங்கள் இருந்தன.

சென்னையில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் புத்தகக் கண்காட்சி என்பதால், சென்னை மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

கடந்த 19 நாட்களாக நடைபெற்று வந்த புத்தகக் கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. சென்னை புத்தகக் கண்காட்சிக்கு அதிக அளவில் மாணவர்கள் வந்திருந்ததாகவும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மொத்தமாக 15 இலட்சம் வாசகர்கள் வந்ததாகவும், சுமார் 18 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்கப்பட்டுள்ளதாகவும் பபாசி தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags: chennai book fair
ShareTweetSendShare
Previous Post

இராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இன்டெகாப் அலாம் கைது!

Next Post

உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களை அயோத்தி ஒருங்கிணைத்திருக்கிறது: வி.ஹெச்.பி.!

Related News

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies