பொதுமக்களை தூண்டி விட்ட ராகுல் மீது நடவடிக்கை: அஸ்ஸாம் முதல்வர் அறிவிப்பு!
Jul 26, 2025, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொதுமக்களை தூண்டி விட்ட ராகுல் மீது நடவடிக்கை: அஸ்ஸாம் முதல்வர் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Jan 23, 2024, 07:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொதுமக்களை தூண்டி விடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு பரிந்துரை செய்திருப்பதாக அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா கூறியிருக்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்கிற பெயரில் புதிதாக ஒரு யாத்திரையை வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கி இருக்கிறார். மணிப்பூரில் தொடங்கிய இந்த யாத்திரை தற்போது அஸ்ஸாமில் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில், நேற்று அயோத்தி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால், ராகுல் காந்தியின் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது. இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல, அஸ்ஸாமில் உள்ள பல்கலைக் கழகத்திற்குள் செல்ல அளிக்கப்பட்ட அனுமதியும் திடீரென ரத்து செய்யப்பட்டது. எனவே, ராகுல் காந்தி பேருந்தின் மீது ஏறி நின்று உரையாற்றினார். மேலும், காங்கிரஸ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, காங்கிரஸ் கட்சியினர் சாலையின் இரும்புத் தடுப்புகளை சேதப்படுத்தப்படுத்தினர். இதையடுத்து, நடைப்பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட 2 பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் நுழைவதைத் தடுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால் மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த காட்சிகளை காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, அந்தப் பதிவுக்கு பதிலளித்து அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அப்பதிவில், “இது நக்சலைட்களின் தந்திரம். பொதுமக்களை தனது பேச்சுக்களால் தூண்டிவிட்ட உங்கள் தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க அஸ்ஸாம் டி.ஜி.பி.க்கு அறிவுறுத்தி இருக்கிறேன். மேலும், இது அஸ்ஸாமின் காலாச்சரமல்ல, முழுவதும் அந்நியமானது.

உங்களது உண்மையற்ற தன்மையாலும், ஒப்புக்கொள்ளப்பட்ட வழிகாட்டுதல்களை மீறியதாலும் கௌகாத்தியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: Yatrarahul gandhiAssamCM himanta biswa sarma
ShareTweetSendShare
Previous Post

இராமனுக்குத் தடை போட்டால் பக்தியாலும் சக்தியாலும் தகர்க்கப்படும்: தெலங்கானா ஆளுநர்!

Next Post

நாடாளுமன்ற பாதுகாப்பு பணியில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!

Related News

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

Load More

அண்மைச் செய்திகள்

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies