பொதுமக்களை தூண்டி விட்ட ராகுல் மீது நடவடிக்கை: அஸ்ஸாம் முதல்வர் அறிவிப்பு!
Sep 9, 2025, 09:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொதுமக்களை தூண்டி விட்ட ராகுல் மீது நடவடிக்கை: அஸ்ஸாம் முதல்வர் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Jan 23, 2024, 07:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொதுமக்களை தூண்டி விடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு பரிந்துரை செய்திருப்பதாக அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா கூறியிருக்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்கிற பெயரில் புதிதாக ஒரு யாத்திரையை வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கி இருக்கிறார். மணிப்பூரில் தொடங்கிய இந்த யாத்திரை தற்போது அஸ்ஸாமில் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில், நேற்று அயோத்தி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால், ராகுல் காந்தியின் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது. இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல, அஸ்ஸாமில் உள்ள பல்கலைக் கழகத்திற்குள் செல்ல அளிக்கப்பட்ட அனுமதியும் திடீரென ரத்து செய்யப்பட்டது. எனவே, ராகுல் காந்தி பேருந்தின் மீது ஏறி நின்று உரையாற்றினார். மேலும், காங்கிரஸ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, காங்கிரஸ் கட்சியினர் சாலையின் இரும்புத் தடுப்புகளை சேதப்படுத்தப்படுத்தினர். இதையடுத்து, நடைப்பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட 2 பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் நுழைவதைத் தடுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால் மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த காட்சிகளை காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, அந்தப் பதிவுக்கு பதிலளித்து அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அப்பதிவில், “இது நக்சலைட்களின் தந்திரம். பொதுமக்களை தனது பேச்சுக்களால் தூண்டிவிட்ட உங்கள் தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க அஸ்ஸாம் டி.ஜி.பி.க்கு அறிவுறுத்தி இருக்கிறேன். மேலும், இது அஸ்ஸாமின் காலாச்சரமல்ல, முழுவதும் அந்நியமானது.

உங்களது உண்மையற்ற தன்மையாலும், ஒப்புக்கொள்ளப்பட்ட வழிகாட்டுதல்களை மீறியதாலும் கௌகாத்தியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: rahul gandhiAssamCM himanta biswa sarmaYatra
ShareTweetSendShare
Previous Post

இராமனுக்குத் தடை போட்டால் பக்தியாலும் சக்தியாலும் தகர்க்கப்படும்: தெலங்கானா ஆளுநர்!

Next Post

நாடாளுமன்ற பாதுகாப்பு பணியில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!

Related News

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies