பொதுமக்களை தூண்டி விட்ட ராகுல் மீது நடவடிக்கை: அஸ்ஸாம் முதல்வர் அறிவிப்பு!
Jun 15, 2026, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொதுமக்களை தூண்டி விட்ட ராகுல் மீது நடவடிக்கை: அஸ்ஸாம் முதல்வர் அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 23, 2024, 07:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொதுமக்களை தூண்டி விடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு பரிந்துரை செய்திருப்பதாக அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா கூறியிருக்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்கிற பெயரில் புதிதாக ஒரு யாத்திரையை வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கி இருக்கிறார். மணிப்பூரில் தொடங்கிய இந்த யாத்திரை தற்போது அஸ்ஸாமில் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில், நேற்று அயோத்தி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால், ராகுல் காந்தியின் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது. இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல, அஸ்ஸாமில் உள்ள பல்கலைக் கழகத்திற்குள் செல்ல அளிக்கப்பட்ட அனுமதியும் திடீரென ரத்து செய்யப்பட்டது. எனவே, ராகுல் காந்தி பேருந்தின் மீது ஏறி நின்று உரையாற்றினார். மேலும், காங்கிரஸ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, காங்கிரஸ் கட்சியினர் சாலையின் இரும்புத் தடுப்புகளை சேதப்படுத்தப்படுத்தினர். இதையடுத்து, நடைப்பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட 2 பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் நுழைவதைத் தடுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால் மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த காட்சிகளை காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, அந்தப் பதிவுக்கு பதிலளித்து அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அப்பதிவில், “இது நக்சலைட்களின் தந்திரம். பொதுமக்களை தனது பேச்சுக்களால் தூண்டிவிட்ட உங்கள் தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க அஸ்ஸாம் டி.ஜி.பி.க்கு அறிவுறுத்தி இருக்கிறேன். மேலும், இது அஸ்ஸாமின் காலாச்சரமல்ல, முழுவதும் அந்நியமானது.

உங்களது உண்மையற்ற தன்மையாலும், ஒப்புக்கொள்ளப்பட்ட வழிகாட்டுதல்களை மீறியதாலும் கௌகாத்தியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: rahul gandhiAssamCM himanta biswa sarmaYatra
ShareTweetSendShare
Previous Post

இராமனுக்குத் தடை போட்டால் பக்தியாலும் சக்தியாலும் தகர்க்கப்படும்: தெலங்கானா ஆளுநர்!

Next Post

நாடாளுமன்ற பாதுகாப்பு பணியில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies