பொதுமக்களை தூண்டி விட்ட ராகுல் மீது நடவடிக்கை: அஸ்ஸாம் முதல்வர் அறிவிப்பு!
Sep 14, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொதுமக்களை தூண்டி விட்ட ராகுல் மீது நடவடிக்கை: அஸ்ஸாம் முதல்வர் அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 23, 2024, 07:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொதுமக்களை தூண்டி விடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு பரிந்துரை செய்திருப்பதாக அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா கூறியிருக்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்கிற பெயரில் புதிதாக ஒரு யாத்திரையை வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கி இருக்கிறார். மணிப்பூரில் தொடங்கிய இந்த யாத்திரை தற்போது அஸ்ஸாமில் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில், நேற்று அயோத்தி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால், ராகுல் காந்தியின் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது. இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல, அஸ்ஸாமில் உள்ள பல்கலைக் கழகத்திற்குள் செல்ல அளிக்கப்பட்ட அனுமதியும் திடீரென ரத்து செய்யப்பட்டது. எனவே, ராகுல் காந்தி பேருந்தின் மீது ஏறி நின்று உரையாற்றினார். மேலும், காங்கிரஸ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, காங்கிரஸ் கட்சியினர் சாலையின் இரும்புத் தடுப்புகளை சேதப்படுத்தப்படுத்தினர். இதையடுத்து, நடைப்பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட 2 பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் நுழைவதைத் தடுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால் மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த காட்சிகளை காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, அந்தப் பதிவுக்கு பதிலளித்து அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அப்பதிவில், “இது நக்சலைட்களின் தந்திரம். பொதுமக்களை தனது பேச்சுக்களால் தூண்டிவிட்ட உங்கள் தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க அஸ்ஸாம் டி.ஜி.பி.க்கு அறிவுறுத்தி இருக்கிறேன். மேலும், இது அஸ்ஸாமின் காலாச்சரமல்ல, முழுவதும் அந்நியமானது.

உங்களது உண்மையற்ற தன்மையாலும், ஒப்புக்கொள்ளப்பட்ட வழிகாட்டுதல்களை மீறியதாலும் கௌகாத்தியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: rahul gandhiAssamCM himanta biswa sarmaYatra
Share
Tweet
SendShare
Previous Post

இராமனுக்குத் தடை போட்டால் பக்தியாலும் சக்தியாலும் தகர்க்கப்படும்: தெலங்கானா ஆளுநர்!

Next Post

நாடாளுமன்ற பாதுகாப்பு பணியில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies