புலந்த்ஷாஹரில் ரூ.19,000 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள்: தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!
Sep 30, 2025, 09:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புலந்த்ஷாஹரில் ரூ.19,000 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள்: தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Jan 25, 2024, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரின் இன்று 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மாலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்குச் சென்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை வரவேற்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கின்றன. இந்த சூழலில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று உத்தரப் பிரதேச மாநிலத்துக்குச் செல்கிறார். அங்கு, புலந்த்ஷாஹரில் 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மேலும், இதன் மூலம் தனது தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்களில் இரயில், சாலை, எண்ணெய், எரிவாயு மற்றும் நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி உள்ளிட்ட முக்கியமான துறைகளுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, ​​பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் (DFC) நியூ குர்ஜா – புதிய ரேவாரி இடையே 173 கி.மீ. நீளமுள்ள இரட்டைப் பாதை மின்மயமாக்கப்பட்ட பகுதியை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த 2 இரயில் நிலையங்களில் இருந்தும் சரக்கு இரயில்களை காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்த புதிய DFC பிரிவு முக்கியமானது. ஏனெனில், இது மேற்கு மற்றும் கிழக்கு சரக்கு வழித்தடத்திற்கு இடையே முக்கியமான இணைப்பை ஏற்படுத்துகிறது. பிரத்யேக சரக்கு வழித்தடப் பாதையில் சரக்கு இரயில்கள் மாற்றப்படுவதால், பயணிகள் இரயில்களின் இயக்கத்தை மேம்படுத்த இந்தப் புதிய பிரிவு உதவும்.

மேலும், மதுரா – பல்வால் பகுதியையும், சிபியானா புசுர்க் – தாத்ரி பகுதியையும் இணைக்கும் 4-வது பாதையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த புதிய வழித்தடங்கள் தேசிய தலைநகரின் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவிற்கான இரயில் இணைப்பை மேம்படுத்தும்.

அதேபோல, பிரதமர் மோடி பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அலிகார் முதல் பத்வாஸ் வரை 4 வழிச்சாலை பணி, மீரட் முதல் கர்னால் வரையிலான எல்லையை விரிவுபடுத்துதல் மற்றும் தேசிய நெடுஞ்சாலையின் ஷாம்லி – முசாபர்நகர் பகுதியை 4 வழிப்பாதையாக்குதல் ஆகியவையும் இத்திட்டங்களில் அடங்கும்.

நிகழ்ச்சியின்போது, ​​இந்தியன் ஆயிலின் துண்ட்லா – கவாரியா பைப்லைனையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மேலும், கிரேட்டர் நொய்டாவில் ஒருங்கிணைந்த தொழில்துறை நகரத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மாலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்குச் செல்லும் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை வரவேற்கிறார். தொடர்ந்து, ஜந்தர் மந்தர், ஹவா மஹால் மற்றும் ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் இணைந்து பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.

Tags: uttar pradeshRajastanPM Modi
ShareTweetSendShare
Previous Post

பழனியில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றுவருகிறது !

Next Post

மக்களவைத் தேர்தலில் 350 தொகுதிகளில் வெற்றிபெறுவோம்: மத்திய அமைச்சர் உறுதி!

Related News

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

ஷெபாஸ் ஷெரீப்பை தெறிக்கவிட்ட சிங்கப்பெண் : ஐ.நா.வில் முழங்கிய பெடல் கெலாட் யார்?

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies