புலந்த்ஷாஹரில் ரூ.19,000 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள்: தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!
Jan 14, 2026, 01:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புலந்த்ஷாஹரில் ரூ.19,000 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள்: தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 25, 2024, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரின் இன்று 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மாலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்குச் சென்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை வரவேற்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கின்றன. இந்த சூழலில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று உத்தரப் பிரதேச மாநிலத்துக்குச் செல்கிறார். அங்கு, புலந்த்ஷாஹரில் 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மேலும், இதன் மூலம் தனது தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்களில் இரயில், சாலை, எண்ணெய், எரிவாயு மற்றும் நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி உள்ளிட்ட முக்கியமான துறைகளுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, ​​பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் (DFC) நியூ குர்ஜா – புதிய ரேவாரி இடையே 173 கி.மீ. நீளமுள்ள இரட்டைப் பாதை மின்மயமாக்கப்பட்ட பகுதியை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த 2 இரயில் நிலையங்களில் இருந்தும் சரக்கு இரயில்களை காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்த புதிய DFC பிரிவு முக்கியமானது. ஏனெனில், இது மேற்கு மற்றும் கிழக்கு சரக்கு வழித்தடத்திற்கு இடையே முக்கியமான இணைப்பை ஏற்படுத்துகிறது. பிரத்யேக சரக்கு வழித்தடப் பாதையில் சரக்கு இரயில்கள் மாற்றப்படுவதால், பயணிகள் இரயில்களின் இயக்கத்தை மேம்படுத்த இந்தப் புதிய பிரிவு உதவும்.

மேலும், மதுரா – பல்வால் பகுதியையும், சிபியானா புசுர்க் – தாத்ரி பகுதியையும் இணைக்கும் 4-வது பாதையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த புதிய வழித்தடங்கள் தேசிய தலைநகரின் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவிற்கான இரயில் இணைப்பை மேம்படுத்தும்.

அதேபோல, பிரதமர் மோடி பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அலிகார் முதல் பத்வாஸ் வரை 4 வழிச்சாலை பணி, மீரட் முதல் கர்னால் வரையிலான எல்லையை விரிவுபடுத்துதல் மற்றும் தேசிய நெடுஞ்சாலையின் ஷாம்லி – முசாபர்நகர் பகுதியை 4 வழிப்பாதையாக்குதல் ஆகியவையும் இத்திட்டங்களில் அடங்கும்.

நிகழ்ச்சியின்போது, ​​இந்தியன் ஆயிலின் துண்ட்லா – கவாரியா பைப்லைனையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மேலும், கிரேட்டர் நொய்டாவில் ஒருங்கிணைந்த தொழில்துறை நகரத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மாலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்குச் செல்லும் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை வரவேற்கிறார். தொடர்ந்து, ஜந்தர் மந்தர், ஹவா மஹால் மற்றும் ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் இணைந்து பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.

Tags: PM Modiuttar pradeshRajastan
ShareTweetSendShare
Previous Post

பழனியில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றுவருகிறது !

Next Post

மக்களவைத் தேர்தலில் 350 தொகுதிகளில் வெற்றிபெறுவோம்: மத்திய அமைச்சர் உறுதி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies