பீகாரில் 2025 தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதி: மத்திய அமைச்சர்!
Aug 21, 2025, 06:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பீகாரில் 2025 தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதி: மத்திய அமைச்சர்!

Web Desk by Web Desk
Jan 27, 2024, 05:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மீண்டும் பா.ஜ.க.வில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், 2025 சட்டப்பேரவைத் தேர்தலில் பீகாரில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதி என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியிருக்கிறார்.

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிதீஷ்குமார், ஆட்சியமைத்த பிறகு கூட்டணி முறித்துக் கொண்டார்.

இதன் பின்னர், காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார். அதோடு, பா.ஜ.க.வுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள மாநிலக் கட்சிகளை ஒன்று திரட்டி, இண்டி கூட்டணியை அமைக்கக் காரணமாக இருந்தார்.

ஆனால், சமீப காலமாகவே இண்டி கூட்டணி மீது நிதீஷ்குமார் அதிருப்தியில் இருந்து வருகிறார். மேலும், லாலு பிரசாத் தனது இரு மகன்கள் மற்றும் மகளுக்கு அமைச்சர், துணை முதல்வர், எம்.பி. பதவிகளை பெற்றுக் கொண்டதால் மாநில கூட்டணி மீதும் அதிருப்தியில் இருக்கிறார்.

இதனிடையே, தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்று கூறினார். உடனே, தங்கள் குடும்பத்தைப் பற்றித்தான் சொல்கிறார் என்று கருதி லாலுவின் மகள் சமூக வலைத்தளங்களில் நிதீஷ்குமாருக்கு எதிராக கடுமையான பதிவுகளை வெளியிட்டார்.

இந்த சூழலில், முதல்வர் நிதீஷ்குமார் மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இணையப்போவதாக காட்டுத் தீ போல தகவல்கள் பரவி வருகிறது.  மேலும், இன்று மாநில ஆளுநரை நிதீஷ்குமார் சந்திக்கச் செல்வதாகவும் தகவல் பரவியால் பீகார் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், பீகார் மாநிலத்துக்குச் சென்றிருக்கும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வரும் 2025 சட்டமன்றத் தேர்தலில் பீகாரில் நிச்சயம் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும். அதேபோல, நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வுக்குத்தான் மக்கள் நிச்சயம் வாக்களிப்பார்கள்.

மாநிலத்தில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளவே இங்கு வந்திருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அதேசமயம், பீகார் முதல்வர் நிதீஷ்குமார் பா.ஜ.க.வில் சேரப்போவதாகப் பரவி வரும் தகவல் குறித்து எந்தக் கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.

Tags: Central MinisterBiharGiriraj singh
ShareTweetSendShare
Previous Post

“எனக்கும் போராடத் தெரியும்”: சாலையில் அமர்ந்து கேரள ஆளுநர் தர்ணா!

Next Post

இந்தியாவில் 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Related News

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இருவர் படுகாயம்!

கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies