"எனக்கும் போராடத் தெரியும்": சாலையில் அமர்ந்து கேரள ஆளுநர் தர்ணா!
Apr 29, 2026, 07:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“எனக்கும் போராடத் தெரியும்”: சாலையில் அமர்ந்து கேரள ஆளுநர் தர்ணா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 27, 2024, 05:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனக்கு எதிராகப் போராட்டம் நடத்திய ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாணவர் பிரிவினரை கண்டித்து கொல்லம் அருகே சாலையில் சேர் போட்டு அமர்ந்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தர்ணாவில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில ஆளுநராக ஆரிப் முகமது கான் இருந்து வருகிறார். இவருக்கும், ஆளும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதனால், ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான எஸ்.எஃப்.ஐ. அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் காரணமாக, சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது தனது உரையில் கடைசி வரியை மட்டும் படித்துவிட்டு ஆளுநர் ஆரிப் முகமது அவையிலிருந்து வெளியேறினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஆளுநர் ஆரிப் முகமது கான், கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்றார். அப்போது, எஸ்.எஃப்.ஐ. மாணவர் சங்கத்தினர், ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, காரில் இருந்து இறங்கிய ஆளுநர் ஆரிப் முகமது கான், மாணவர் சங்கத்தினரை பாதுகாப்பது ஏன் என்று போலீஸாரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். மேலும், போராட்டம் நடத்திய மாணவர்களிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்படி இருந்தும் கோபம் குறையாத ஆளுநர் ஆரிப் முகமது கான், அங்குள்ள டீக்கடை முன்பு சேர் போட்டு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று தெரிவித்து விட்டார்.

மேலும், தான் செல்லும் வழியில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீஸ் தவறிவிட்டதாக குற்றம்சாட்டிய ஆளுநர், முதல்வர் பினராயி விஜயன் செல்லும் வழியில் போராட்டக்காரர்கள் திரள அனுமதிப்பீர்களா என்று போலீஸாரை நோக்கி கேள்வி எழுப்பினார்.

அதோடு, போராட்டக்காரர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்து வருகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் நான் இங்கிருந்து கிளம்ப மாட்டேன். காவல் துறை சட்டத்தை மீறி செயல்பட்டு வருகிறது என்று ஆளுநர் ஆவேசமாக தெரிவித்தார்.

இதனால், செய்வதறியாது தவித்த போலீஸார், ஆளுநரை சமாதானப்படுத்த முயன்றனர். 12 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்த நிலையில், அதனை ஏற்காத ஆளுநர் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

ஆளுநர் தர்ணாவில் ஈடுபட்ட செய்தியறிந்து ஏராளமான பொதுமக்களும் அங்கு குவிந்தனர். ஆளுநரே தர்ணாவில் ஈடுபடும் சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த பகுதியில் அதிகளவில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags: KeralaprotestagainstGovernorSFI
ShareTweetSendShare
Previous Post

இரண்டு வாரத்தில் பெரிய அளவு வசூல் செய்த ஹனுமான் படம் !

Next Post

பீகாரில் 2025 தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதி: மத்திய அமைச்சர்!

Related News

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies