"எனக்கும் போராடத் தெரியும்": சாலையில் அமர்ந்து கேரள ஆளுநர் தர்ணா!
Sep 12, 2026, 12:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“எனக்கும் போராடத் தெரியும்”: சாலையில் அமர்ந்து கேரள ஆளுநர் தர்ணா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 27, 2024, 05:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தனக்கு எதிராகப் போராட்டம் நடத்திய ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாணவர் பிரிவினரை கண்டித்து கொல்லம் அருகே சாலையில் சேர் போட்டு அமர்ந்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தர்ணாவில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில ஆளுநராக ஆரிப் முகமது கான் இருந்து வருகிறார். இவருக்கும், ஆளும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதனால், ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான எஸ்.எஃப்.ஐ. அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் காரணமாக, சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது தனது உரையில் கடைசி வரியை மட்டும் படித்துவிட்டு ஆளுநர் ஆரிப் முகமது அவையிலிருந்து வெளியேறினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஆளுநர் ஆரிப் முகமது கான், கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்றார். அப்போது, எஸ்.எஃப்.ஐ. மாணவர் சங்கத்தினர், ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, காரில் இருந்து இறங்கிய ஆளுநர் ஆரிப் முகமது கான், மாணவர் சங்கத்தினரை பாதுகாப்பது ஏன் என்று போலீஸாரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். மேலும், போராட்டம் நடத்திய மாணவர்களிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்படி இருந்தும் கோபம் குறையாத ஆளுநர் ஆரிப் முகமது கான், அங்குள்ள டீக்கடை முன்பு சேர் போட்டு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று தெரிவித்து விட்டார்.

மேலும், தான் செல்லும் வழியில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீஸ் தவறிவிட்டதாக குற்றம்சாட்டிய ஆளுநர், முதல்வர் பினராயி விஜயன் செல்லும் வழியில் போராட்டக்காரர்கள் திரள அனுமதிப்பீர்களா என்று போலீஸாரை நோக்கி கேள்வி எழுப்பினார்.

அதோடு, போராட்டக்காரர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்து வருகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் நான் இங்கிருந்து கிளம்ப மாட்டேன். காவல் துறை சட்டத்தை மீறி செயல்பட்டு வருகிறது என்று ஆளுநர் ஆவேசமாக தெரிவித்தார்.

இதனால், செய்வதறியாது தவித்த போலீஸார், ஆளுநரை சமாதானப்படுத்த முயன்றனர். 12 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்த நிலையில், அதனை ஏற்காத ஆளுநர் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

ஆளுநர் தர்ணாவில் ஈடுபட்ட செய்தியறிந்து ஏராளமான பொதுமக்களும் அங்கு குவிந்தனர். ஆளுநரே தர்ணாவில் ஈடுபடும் சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த பகுதியில் அதிகளவில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags: KeralaprotestagainstGovernorSFI
Share
Tweet
SendShare
Previous Post

இரண்டு வாரத்தில் பெரிய அளவு வசூல் செய்த ஹனுமான் படம் !

Next Post

பீகாரில் 2025 தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதி: மத்திய அமைச்சர்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies