பீகாரில் 2025 தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதி: மத்திய அமைச்சர்!
Apr 29, 2026, 08:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பீகாரில் 2025 தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதி: மத்திய அமைச்சர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 27, 2024, 05:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மீண்டும் பா.ஜ.க.வில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், 2025 சட்டப்பேரவைத் தேர்தலில் பீகாரில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதி என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியிருக்கிறார்.

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிதீஷ்குமார், ஆட்சியமைத்த பிறகு கூட்டணி முறித்துக் கொண்டார்.

இதன் பின்னர், காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார். அதோடு, பா.ஜ.க.வுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள மாநிலக் கட்சிகளை ஒன்று திரட்டி, இண்டி கூட்டணியை அமைக்கக் காரணமாக இருந்தார்.

ஆனால், சமீப காலமாகவே இண்டி கூட்டணி மீது நிதீஷ்குமார் அதிருப்தியில் இருந்து வருகிறார். மேலும், லாலு பிரசாத் தனது இரு மகன்கள் மற்றும் மகளுக்கு அமைச்சர், துணை முதல்வர், எம்.பி. பதவிகளை பெற்றுக் கொண்டதால் மாநில கூட்டணி மீதும் அதிருப்தியில் இருக்கிறார்.

இதனிடையே, தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்று கூறினார். உடனே, தங்கள் குடும்பத்தைப் பற்றித்தான் சொல்கிறார் என்று கருதி லாலுவின் மகள் சமூக வலைத்தளங்களில் நிதீஷ்குமாருக்கு எதிராக கடுமையான பதிவுகளை வெளியிட்டார்.

இந்த சூழலில், முதல்வர் நிதீஷ்குமார் மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இணையப்போவதாக காட்டுத் தீ போல தகவல்கள் பரவி வருகிறது.  மேலும், இன்று மாநில ஆளுநரை நிதீஷ்குமார் சந்திக்கச் செல்வதாகவும் தகவல் பரவியால் பீகார் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், பீகார் மாநிலத்துக்குச் சென்றிருக்கும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வரும் 2025 சட்டமன்றத் தேர்தலில் பீகாரில் நிச்சயம் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும். அதேபோல, நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வுக்குத்தான் மக்கள் நிச்சயம் வாக்களிப்பார்கள்.

மாநிலத்தில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளவே இங்கு வந்திருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அதேசமயம், பீகார் முதல்வர் நிதீஷ்குமார் பா.ஜ.க.வில் சேரப்போவதாகப் பரவி வரும் தகவல் குறித்து எந்தக் கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.

Tags: Central MinisterBiharGiriraj singh
ShareTweetSendShare
Previous Post

“எனக்கும் போராடத் தெரியும்”: சாலையில் அமர்ந்து கேரள ஆளுநர் தர்ணா!

Next Post

இந்தியாவில் 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies