பீகாரில் 2025 தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதி: மத்திய அமைச்சர்!
Aug 13, 2026, 02:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பீகாரில் 2025 தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதி: மத்திய அமைச்சர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 27, 2024, 05:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மீண்டும் பா.ஜ.க.வில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், 2025 சட்டப்பேரவைத் தேர்தலில் பீகாரில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதி என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியிருக்கிறார்.

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிதீஷ்குமார், ஆட்சியமைத்த பிறகு கூட்டணி முறித்துக் கொண்டார்.

இதன் பின்னர், காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார். அதோடு, பா.ஜ.க.வுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள மாநிலக் கட்சிகளை ஒன்று திரட்டி, இண்டி கூட்டணியை அமைக்கக் காரணமாக இருந்தார்.

ஆனால், சமீப காலமாகவே இண்டி கூட்டணி மீது நிதீஷ்குமார் அதிருப்தியில் இருந்து வருகிறார். மேலும், லாலு பிரசாத் தனது இரு மகன்கள் மற்றும் மகளுக்கு அமைச்சர், துணை முதல்வர், எம்.பி. பதவிகளை பெற்றுக் கொண்டதால் மாநில கூட்டணி மீதும் அதிருப்தியில் இருக்கிறார்.

இதனிடையே, தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்று கூறினார். உடனே, தங்கள் குடும்பத்தைப் பற்றித்தான் சொல்கிறார் என்று கருதி லாலுவின் மகள் சமூக வலைத்தளங்களில் நிதீஷ்குமாருக்கு எதிராக கடுமையான பதிவுகளை வெளியிட்டார்.

இந்த சூழலில், முதல்வர் நிதீஷ்குமார் மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இணையப்போவதாக காட்டுத் தீ போல தகவல்கள் பரவி வருகிறது.  மேலும், இன்று மாநில ஆளுநரை நிதீஷ்குமார் சந்திக்கச் செல்வதாகவும் தகவல் பரவியால் பீகார் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், பீகார் மாநிலத்துக்குச் சென்றிருக்கும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வரும் 2025 சட்டமன்றத் தேர்தலில் பீகாரில் நிச்சயம் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும். அதேபோல, நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வுக்குத்தான் மக்கள் நிச்சயம் வாக்களிப்பார்கள்.

மாநிலத்தில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளவே இங்கு வந்திருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அதேசமயம், பீகார் முதல்வர் நிதீஷ்குமார் பா.ஜ.க.வில் சேரப்போவதாகப் பரவி வரும் தகவல் குறித்து எந்தக் கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.

Tags: Central MinisterBiharGiriraj singh
Share
Tweet
SendShare
Previous Post

“எனக்கும் போராடத் தெரியும்”: சாலையில் அமர்ந்து கேரள ஆளுநர் தர்ணா!

Next Post

இந்தியாவில் 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Related News

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies