குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் வரும் 29-ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் 28 மற்றும் 29 தேதிகளில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புதுச்சேரி மற்றும் கடலூருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
முதல் நாளில், மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் நடைபெறும் இந்திய சட்டமன்ற அமைப்புகளின், தலைமை அதிகாரிகளின் 84-வது மாநாட்டின் நிறைவு விழாவில், குடியரசுத் துணைத்தலைவர் உரையாற்றுகிறார்.
பிற்பகலில், குடியரசுத் துணைத்தலைவர் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களுடன் “வளர்ச்சியடைந்த பாரதம் 2047” என்ற தலைப்பில் கலந்துரையாடுகிறார்.
தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளில், தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள தில்லை நடராஜர் கோவில், பாபாஜி கோவில் மற்றும் ஸ்ரீஎல்லையம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார்.