உச்ச நீதிமன்ற வைர விழா கொண்டாட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
Aug 23, 2026, 10:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உச்ச நீதிமன்ற வைர விழா கொண்டாட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 27, 2024, 07:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

இந்திய உச்ச நீதிமன்றம் 1950 ஜனவரி 28-ம் தேதி, தனியாக எதுவும் கட்டடம் இல்லாததால், நாடாளுமன்றக் கட்டத்தில் திறக்கப்பட்டது. அந்த வகையில், உச்ச நீதிமன்றம் 75-வது வைர விழாவை நாளை கொண்டாடவிருக்கிறது. இவ்விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உச்ச நீதிமன்றத்தின் 75-வது ஆண்டைக் குறிக்கும் வகையில், டிஜிட்டல் உச்ச நீதிமன்ற அறிக்கைகள் (டி.ஜி.எஸ்.சி.ஆர்.), டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.0 மற்றும் உச்ச நீதிமன்றத்தின் புதிய இணையதளம் உள்ளிட்ட குடிமக்களை மையமாகக் கொண்ட தகவல் மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மேலும், இந்த சிறப்பு நிகழ்வில் பிரதமர் மோடி கூட்டத்தில் உரையாற்றுவார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

டிஜிட்டல் உச்ச நீதிமன்ற அறிக்கைகள் (SCR) உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை நாட்டின் குடிமக்களுக்கு இலவசமாகவும் மின்னணு வடிவத்திலும் கிடைக்கச் செய்யும். டிஜிட்டல் உச்ச நீதிமன்ற அறிக்கைகளின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால், 1950 முதல் உச்ச நீதிமன்ற அறிக்கைகளின் அனைத்து 519 தொகுதிகளும் (36,308 வழக்குகளை உள்ளடக்கியது), டிஜிட்டல் வடிவத்தில் புக்மார்க் செய்யப்பட்ட திறந்த அணுகலுடன் கிடைக்கும்.

டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.0 விண்ணப்பமானது, மின்னணு வடிவத்தில் நீதிமன்றப் பதிவுகளை மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்குக் கிடைக்கச் செய்வதற்கான மின் நீதிமன்றத் திட்டத்தின் கீழ் ஒரு சமீபத்திய முயற்சியாகும். இது நிகழ்நேர அடிப்படையில் பேச்சை உரைக்கு மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது உச்ச நீதிமன்றத்தின் புதிய இணையதளத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். புதிய இணையதளம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருமொழி வடிவில் இருக்கும். மேலும், பயனர் நட்பு இடைமுகத்துடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modisupreme courtInaguratesCelebrationDiamond jubilee
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் : பிடிஐ கட்சித் தலைவர்கள் போட்டியிட நீதிமன்றம் அனுமதி!

Next Post

தமிழகம் வருகிறார் குடியரசுத் துணைத்தலைவர்!

Related News

ஒடிசாவின் பாரதீப் துறைமுகம் அருகே பனாமா சரக்கு கப்பல் விபத்து – மீட்பு பணி தீவிரம்!

அசிம் முனீரிடம் குவியும் அதிகாரம் : முடியரசு ஆகும் பாகிஸ்தான் – இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? – சிறப்பு தொகுப்பு!

நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் கேட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் – வழக்கறிஞர் ரமேஷ் பிரபு குற்றச்சாட்டு!

கம்யூனிஸ்ட் கட்சியினரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டது மாவட்ட ஆட்சியருக்கே தெரியாது – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக தேசியப் பொறுப்பாளர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

“பார்த்த ஞாபகம் இல்லையோ” : நடிகை சௌகார் ஜானகி கடந்து வந்த பாதை- சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டை சீர்குலைக்க நடந்த சதி முறியடிப்பு : பாகிஸ்தான் கைக்கூலியான Shehzad Bhatti நெட்வொர்க் அழிக்கப்பட்டது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

திமுக நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம் – 13 பேரின் பதவி பறிப்பு?

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தலைவணங்குகிறேன் – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

நடிகை சௌகார் ஜானகி உடலுக்கு சபாநாயகர், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி – தமிழக அரசு சார்பில் மரியாதை!

கூலிப்படை தலைவர்களாக மாறி வரும் தவெக நிர்வாகிகள் – நயினார் நாகேந்திரன்!

திமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு – வயது வரம்பு 70 ஆக நிர்ணயம்!

மின்சார வாரியத்திற்கு அலுமினிய மின்கம்பிகள் வாங்கியதில் ரூ.1000 கோடிக்கு மேல் டெண்டர் முறைகேடு – முதல் தகவல் அறிக்கையில் தகவல்!

தமிழகத்தை சேர்ந்த இரு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

இன்றைய தங்கம் விலை!

தனியாருக்கு நிகராக கொள்முதல் விலை – பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies