மகாத்மா காந்தி குறித்து பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கவிஞர் சல்மா, கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அண்மையில் மலப்புரத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், மற்றும் கவிஞர் சல்மா ஆகிய இருவரும் மகாத்மா காந்தி கொலையில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தொடர்பு உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பு, ராகுல் மற்றும் கவிஞர் சல்மாவுக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருவரும் தங்கள் கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் என்றும், இதுதொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக மலப்புரத்தில் விஷமப் போஸ்டர்களை ஒட்டியதாக இளைஞர் காங்கிரஸ் மலப்புரம் மாவட்டத் தலைவர் ஹரீஸ் முத்தூர் மற்றும் துணைத் தலைவர்கள் நிதிஷ், பிரஜித் மற்றும் விஸ்வநாதன் ஆகியோருக்கு மற்றொரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், சிறுபான்மை சமூகத்தினரிடையே அச்சத்தைத் தூண்டும் வகையிலும் தவறான தகவல்களைப் பரப்புவதற்குப் பதிலடியாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் சட்ட நடவடிக்கைகள் அமைந்துள்ளது.