ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை வீரர் நிஷாங்கா இரட்டை சதம் அடித்து 24 வருட சாதனையை முறியடித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையே 1 டெஸ்ட் போட்டி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது.
முதலில் இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் இலங்கை அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒரு நாள் போட்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 381 ரன்களை எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக பதும் நிஷாங்கா 20 பௌண்டரீஸ் மற்றும் 8 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 210 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதேபோல் அவிஷ்கா 88 பந்துகளில் 88 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். சதீர 45 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல் ஃபரீத் அகமது 2 விக்கெட்களும், முகமது நபி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 339 ரன்களை எடுத்தனர். இதில் அதிகபட்சமாக அஸ்மத்துல்லா 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் முகமது நபி 136 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணியில் பிரமோத் மதுஷன் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
துஷ்மந்த சமீரா 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் இலங்கை அணி 42 ரன்களை எடுத்து வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மேலும் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆட்டநாயகன் விருது 210 ரன்களை ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த பதும் நிஷாங்காவுக்கு வழங்கப்பட்டது.
மேலும் இந்த போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்தார். அஇதுமட்டுமல்லாமல் இலங்கை ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரான ஜெயசூர்யாவின் 189 ரன்களை சாதனையையும் நிஷாங்கா முறியடித்துள்ளார். 24 ஆண்டுகளுக்கு பின் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.