24 வருட சாதனையை முறியடித்த இலங்கை வீரர் நிஷாங்கா !
Jun 14, 2026, 06:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

24 வருட சாதனையை முறியடித்த இலங்கை வீரர் நிஷாங்கா !

Murugesan M by Murugesan M
Feb 10, 2024, 11:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை  வீரர் நிஷாங்கா இரட்டை சதம் அடித்து 24 வருட சாதனையை முறியடித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையே 1 டெஸ்ட் போட்டி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது.

முதலில் இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் இலங்கை அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒரு நாள் போட்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 381 ரன்களை எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக பதும் நிஷாங்கா 20 பௌண்டரீஸ் மற்றும் 8 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 210 ரன்களை எடுத்து  கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதேபோல் அவிஷ்கா 88 பந்துகளில் 88 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். சதீர 45 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல் ஃபரீத் அகமது 2 விக்கெட்களும், முகமது நபி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 339 ரன்களை எடுத்தனர்.  இதில்  அதிகபட்சமாக அஸ்மத்துல்லா 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் முகமது நபி 136 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணியில் பிரமோத் மதுஷன் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

துஷ்மந்த சமீரா 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் இலங்கை அணி 42 ரன்களை எடுத்து வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மேலும் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆட்டநாயகன் விருது 210 ரன்களை ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த பதும் நிஷாங்காவுக்கு வழங்கப்பட்டது.

மேலும் இந்த போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்தார். அஇதுமட்டுமல்லாமல் இலங்கை ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரான ஜெயசூர்யாவின்  189 ரன்களை சாதனையையும் நிஷாங்கா முறியடித்துள்ளார். 24 ஆண்டுகளுக்கு பின் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

Tags: CricketsrilankaAfghanistanODIpathum nissanka
ShareTweetSendShare
Previous Post

பேருந்து இல்லாததால் பயணிகள் சாலை மறியல் : சென்னை முழுவதும் போராட்டம் வெடிக்கும் என அண்ணாமலை எச்சரிக்கை!

Next Post

பாகிஸ்தானில் வன்முறை: 2 பேர் உயிரிழப்பு!

Related News

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies