ராமரை கற்பனை பாத்திரம் என்று தெரிவித்த காங்கிரசார் "ஜெய் ஸ்ரீ ராம்" என வணங்குகின்றனர் : பிரதமர் மோடி
Mar 15, 2026, 04:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமரை கற்பனை பாத்திரம் என்று தெரிவித்த காங்கிரசார் “ஜெய் ஸ்ரீ ராம்” என வணங்குகின்றனர் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Feb 16, 2024, 04:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமரை கற்பனை பாத்திரம் என தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர், தற்போது ஜெய் ஸ்ரீ ராம் என்று வணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அரியானா மாநிலம் ரெவாரியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.விழாவில் பேசிய அவர், இந்தியா இன்று உலகில் புதிய உயரங்களைத் தொட்டுள்ளது என்றும், மக்களின் ஆசியால் இது சாத்தியமானது என்றும் கூறினார். ராமர் கற்பனை என்று கூறியவர்களும், அயோத்தியில் கோவில் கட்டப்படுவதை விரும்பாதவர்களும் தற்போது ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்குவதாக கூறினார்.

பல தசாப்தங்களாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய  அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்வதில் காங்கிரஸ் தடைகளை  உருவாக்கியதாகவும், அந்தத் தடை தற்போது உடைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர்  குறிப்பிட்டார்.

நாடு மற்றும் நாட்டு மக்களின் நலனைக் காட்டிலும் ஒரு குடும்பத்தின் நலனை மேலாக  வைத்திருப்பதே காங்கிரஸின் சாதனையாகும். 2014ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக  அறிவிக்கப்பட்ட பிறகு எனது முதல் கூட்டம் ரேவாரியில் நடைபெற்றது.

பிரதமர் வேட்பாளராக நான் சில உத்தரவாதங்களை அளித்திருந்தேன். அயோத்தியில்  பிரமாண்ட ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று நாடு விரும்பியது.அது நிறைவேறிவிட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி கைப்பற்றும் என மக்கள் கூறுகிறார்கள். மக்களின் ஆசீர்வாதத்தால் கடந்த ஆண்டு ஜி-20 மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்த முடிந்தது.

மக்களின் ஆசீர்வாதம் காரணமாக 10 ஆண்டு கால ஆட்சியில் பதினொன்றாவது இடத்தில் இருந்த இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற உங்கள் ஆசிகள் தேவை. தற்போது மோடியின் உத்தரவாதம் பற்றி உலகம் முழுவதும் நிறைய பேசப்படுகிறது, மேலும் “மோடியின் உத்தரவாதத்திற்கு ரேவாரி தான் முதல் சாட்சி என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: PM ModibjpCongressjai shri ramAIIMS Hospital in Rewari
ShareTweetSendShare
Previous Post

வரலாற்று சாதனை படைத்த தமிழக வீரர் அஸ்வின்!

Next Post

இந்தியர்களை வெளிநாடு வாழ் இந்தியர் திருமணம் செய்ய கடுமையான விதிகள்: சட்ட கமிஷன் பரிந்துரை!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies