உலகின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக : தேசிய செயற்குழு கூட்டத்தில் ஜே.பி. நட்டா பெருமிதம்!!
Jul 27, 2025, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக : தேசிய செயற்குழு கூட்டத்தில் ஜே.பி. நட்டா பெருமிதம்!!

Web Desk by Web Desk
Feb 17, 2024, 06:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2014 ஆம் ஆண்டு 5 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருந்த பாஜக இன்று உலகின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் இரு நாட்கள் நடைபெறும் செயற்குழு கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த கூட்டத்தில் ஜே.பி. நட்டா சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, “இன்று உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக மாறியுள்ளது. 2014க்கு முன் 5 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருந்த நாம் நீண்ட காலமாக 5-6 மாநிலங்களில் சிக்கித் தவித்தோம். 2014க்குப் பிறகு இன்று 17 மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகளும், 12 மாநிலங்களில் பாஜகவும் ஆட்சியில் உள்ளது.

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 2014-ல் நாட்டில் அறுதிப் பெரும்பான்மையுடன் கூடிய ஆட்சி அமைந்தது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, 2019-ல், மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் ‘ஏழை பஹுமத் சர்க்கார்’ உருவானது. இன்று, எங்கள் கட்சியின் தலைவர்களின் கடின உழைப்பும் முயற்சியும் எங்கள் ஆதிவேஷத்தை ‘மகா ஆதிவேஷனாக’ மாற்றியுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

1989-ல் பாலம்பூரில் தேசிய மாநாடு நடத்தி, ராமர் கோவில் கட்டுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்வோம் என்றோம். சிலர் கோயில் கட்டுவது தொடர்பாக கிண்டல் செய்தார்கள். ஆனால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது. ஜனவரி 22ஆம் தேதி குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்தார்.ஆனால் எதிர்கட்சியினர் வரவில்லை.

முன்னாள் துணை பிரதமர் லால் கிருஷ்ண அத்வானி தனது வாழ்நாள் முழுவதையும் செலவழித்து மாபெரும் கட்சியைக் கட்டியெழுப்புவதில் முக்கியப் பங்காற்றினார். அவரின் நீண்ட அரசியல் மற்றும் பொது வாழ்வு நமக்கு உதாரணம். அவர் ஆற்றிய சேவையையும் நினைவுகூருகிறோம். நாட்டின் உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமர் என்ற வகையிலும், மூத்த தலைவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

இன்று, 80 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்களைப் பெறுகிறார்கள். மோடி அரசாங்கத்தின் கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த மக்களுக்கு பறக்க புதிய சிறகுகளை வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரம், உள்கட்டமைப்பு, கல்வி, வேலைவாய்ப்பு என ஒவ்வொரு விஷயத்திலும், பிரதமர் மோடியின் தலைமை ஒவ்வொரு இந்தியனின் கனவுகளையும் நிறைவேற்றி வருகிறது. பிரதமர் மோடியின் தலைமை இந்தியாவை நிஜமாகவே ஈடு இணையற்ற வகையில் மாற்றுகிறது” என ஜே.பி. நாட்டா கூறினார்.

Tags: Lal Krishna AdvaniModidelhiBJP President JP NattaBJP executives meeting
ShareTweetSendShare
Previous Post

மகிழ்ச்சியில் கோவை தொழில் அதிபர்கள்!

Next Post

சிக்கலில் சென்னை சினிமா தயாரிப்பாளர் – அதிரடி காட்டிய என்.ஐ.ஏ – நடந்தது என்ன?

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies