தேர்தல் வெற்றிக்கு கடினமாக உழைக்க வேண்டும் : தொண்டர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!
Jun 19, 2025, 08:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் வெற்றிக்கு கடினமாக உழைக்க வேண்டும் : தொண்டர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Web Desk by Web Desk
Feb 18, 2024, 04:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து வருவதாகவும், வெளிநாடுகளில் இருந்து பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெய், உரங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லாத இந்தியாவை எதிர்காலத்தில் காண்போம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்த பணிகளை தைரியம் காட்டி முடித்தோம்.  அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதன் மூலம் 5 நூற்றாண்டுகளின் காத்திருப்புக்கு முடிவு கட்டினோம் என தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் பெண்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாஜக அரசு பல  நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது பெருமையாக உள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047 ஆம் ஆண்டுக்குள்  இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்தில் பணியாற்றி வருகிறோம். இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றும் உறுதியை எடுத்துள்ளோம், இது மோடியின் உத்தரவாதம் என அவர் தெரிவித்தார்.

இந்தியா இன்று பெரிய இலக்குகளை நிர்ணயித்து வருகிறது. 2029-ம் ஆண்டு யூத்  ஒலிம்பிக்கிற்கு நாங்கள் தயாராகி வருகிறோம். 2036-ல் நமது நாட்டில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு நாங்கள் உழைத்து வருகிறோம்.

இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து வருகிறோம். எனவே நாங்கள் பெரிய இலக்குகளை நிர்ணயித்து உழைக்கிறோம். வெளிநாடுகளில் இருந்து பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெய், உரங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லாத இந்தியாவை எதிர்காலத்தில் காண்போம்.நமது பாமாயில் திட்டம் நம்  விவசாயிகளுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் நாட்டை காப்பாற்றும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியா 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற சுமார் 60 ஆண்டுகள் ஆனது. 2014 இல், எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியபோது, ​​2 டிரில்லியன் மார்க் கூட கடினமாகத்  தோன்றியது, ஆனால் 10 ஆண்டுகளில் நமது பொருளாதாரத்தில் 2 டிரில்லியன் டாலர்களை கூடுதலாகச் சேர்த்தோம். இந்தியாவின் பொருளாதாரத்தை 5-வது இடத்திற்கு கொண்டு வர 10 ஆண்டுகள் மட்டுமே எடுத்துக் கொண்டோம் என பிரதமர் குறிப்பிட்டார்.

பா.ஜ.க. கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என எதிர்கட்சிகள் பேசுகின்றன. நாம் தேர்தல் வெற்றிக்கு கடினமாக உழைக்க வேண்டும். முதல் முறை வாக்காளர்கள் உள்ளிட்ட அனைவரின் நம்பிக்கையையும் நாம் ஈட்டியாக வேண்டும்.18 வயதை எட்டிய இளைஞர்கள், நாட்டின் 18வது மக்களவையை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். அனைவரின் நம்பிக்கையையும் பெற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. ஆனால், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் தங்கள் நாட்டிற்கு வருமாறு பல வெளிநாடுகள் எனக்கு அழைப்பு விடுத்து உள்ளன. இதற்கு அர்த்தம் என்ன? பா.ஜ., அரசு தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என உலக நாடுகளும் நம்பிக்கையில் உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

Tags: bjpRamar TempleUPA governmentPM Modi
ShareTweetSendShare
Previous Post

வரலாற்று சாதனை படைத்த இந்திய பேட்மிண்டன் மகளிர் அணி !

Next Post

பேருந்து நிலையத்திற்கு பெரியார் பெயரா? வலுக்கும் கண்டனம் !

Related News

இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

சிறைகளில் உள்ள கைதிகளுக்கு பக்தி மற்றும் நீதி போதனை வகுப்புகள் – திருப்பதி தேவஸ்தானம் முடிவு!

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

கோட்டயம் அருகே அரசு பேருந்து பின்னோக்கி சென்று விபத்து!

இந்தியாவின் ராஜ தந்திர வெற்றி : GREY பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்!

ஆக்சியம்-4 திட்டம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் ஒத்திவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்!

மதுரை விமான நிலைய சாலை புற்களில் பற்றிய தீ – வாகன ஓட்டிகள் அவதி!

கோவை பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகள் சேதம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

கோவை பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

சரக்கு லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்தம் – 2,400 டன் அரிசி சரக்கு ரயில்களில் தேக்கம்!

நெல்லை அருகே மகளை கொலை செய்த தந்தை – சரியாக கவனிக்காததால் அடித்து கொன்றதாக வாக்குமூலம்!

குடியரசுத்தலைவருடன் ராணுவ தளபதிகள் சந்திப்பு!

நடிகர் ஆர்யா தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

இந்திய கனடா பிரதமர்கள் சந்திப்பு – இருநாட்டு தலைநகரங்களிலும் மீண்டும் தூதரங்கள் திறக்க ஒப்புதல்!

ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயிலை ஆய்வு மேற்கொள்ள நிபுணர் குழுவுக்கு அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies