குடிசை வீடு to நீதிமன்றம் - நீதிபதியாகும் கூலித் தொழிலாளியின் மகள்!
Jan 14, 2026, 06:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடிசை வீடு to நீதிமன்றம் – நீதிபதியாகும் கூலித் தொழிலாளியின் மகள்!

Murugesan M by Murugesan M
Feb 20, 2024, 07:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு அரசு நடத்திய நீதிபதி தேர்வில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் சுதா வெற்றி பெற்றுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த மேட்டுப்பாளையம் ஊராட்சியில் உள்ளது நாலா நல்லூர் என்ற கிராமம். இந்த ஊரில் வசித்து வரும் கணேசன் – சந்திரா தம்பதியருக்கு மூன்றாவது மகளாகப் பிறந்தவர் சுதா.

இவர், ஒன்றாம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை அங்குள்ள அரசு பள்ளியில் பயின்றார். பின்னர், திருவாரூர் திரு.வி.க. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். இதனைத்தொடர்ந்து, திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று தேர்ச்சி பெற்றார்.

திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், தமிழக அரசு நடத்திய நீதிபதி தேர்வில், முதல் கட்டத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றார். அதன் பிறகு, இரண்டாம் கட்ட தேர்விலும் வெற்றி பெற்றார். திருவாரூர் மாவட்டத்தில் நீதிபதி  தேர்வில் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில், சுதா மட்டும் நீதிபதியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.

தனது வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள சுதா, “எங்கள் குடும்பம் சாதாரணக் குடும்பம். எங்க அப்பா கூலி வேலைக்குச் செல்பவர். நீதிபதியாக வேண்டும் என ஒரு  வைராக்கியத்தோடு படித்தேன். நான் சிறுவயதாக இருக்கும்போது முதல் தற்போது வரை எனது தாய்மாமன் படிப்புக்காக உதவி செய்து வருகிறார்.

நான் இரண்டு விசயத்தை உடைத்துள்ளதாக கருதுகிறேன். முதலில் பெரிய பெரிய அகாடமியில் சேர்ந்து பல லட்சம் பணம் கட்டி படித்தால்தான் வெற்றிபெற முடியும் என்பதை உடைத்துள்ளேன். அடுத்து,  இரண்டாவதாக, பெரிய பெரிய அதிகாரிகள் மகன், மகள்தான் வெற்றி பெற முடியும், சாதாரணமானவர்கள் வெற்றி பெற முடியாது என்பதை உடைத்துள்ளேன்.

அதாவது, என்னைப் போன்று சாதாரண மாணவர்களும் வெற்றி பெற முடியும் என்பதுதான் எனது சாதனை என்றார் மிக அடக்கமாக.  குடிசை வீட்டில்  இருந்து நீதிபதியாக  ஜொலிக்கப்போகும் சுதாவுக்கு, திருவாரூர் பெண்கள், சமூக சேவகர்கள், சட்ட அறிஞர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துமழை பொழிந்து வருகிறார்கள்.

Tags: JudgetiruvarurNala NallurSudha
ShareTweetSendShare
Previous Post

விசாகப்பட்டினத்தில் ‘மிலன் 24’ கடற்படை கூட்டுப் பயிற்சி தொடக்கம்!

Next Post

இருநாள் பயணமாக பிப்ரவரி 27ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies