விசாகப்பட்டினத்தில் 'மிலன் 24' கடற்படை கூட்டுப் பயிற்சி தொடக்கம்!
Jul 28, 2026, 09:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விசாகப்பட்டினத்தில் ‘மிலன் 24’ கடற்படை கூட்டுப் பயிற்சி தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Feb 20, 2024, 06:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 செங்கடலில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை உட்பட பிளவுபட்ட புவிசார் அரசியல் சூழலுக்கு மத்தியில், இந்தியாவின் சார்பில், சுமார் 50 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும், கடற்படை கூட்டுப் பயிற்சி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.

இந்திய கடற்படையின் சார்பில், ‘மிலன் 24’ எனப்படும் 12-வது கடற்படை கூட்டுப்பயிற்சி, ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி (இன்று) தொடங்கியது.  இந்த கூட்டுப் பயிற்சி 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த கூட்டுப்பயிற்சியில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பங்களாதேஷ், தென்கொரியா, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா உட்பட 50 நாடுகளின் கடற்படைகள் கலந்து கொள்கின்றன. நட்பு நாடுகளிலிருந்து 15 போர்க்கப்பல்கள் மற்றும் ஒரு கடல் ரோந்து விமானம் வரவழைக்கப்பட்டதுடன் இந்த பயிற்சி தொடங்கியது.

கடல்சார் படைகளின் செயல்பாட்டு திறன்களை வளர்த்துக்கொள்வது,  சிறந்த  நடைமுறைகளை பகிர்ந்துகொள்வது மற்றும் கடற்படைகளுக்கு இடையிலான தொழில்முறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகியவை இந்தக் கூட்டுப்பயிற்சியின் நோக்கமாக கூறப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையில் இருந்து, விமானம் தாங்கி  கப்பல்களான விக்ராந்த் மற்றும் விக்ரமாதித்யா உட்பட கிட்டத்தட்ட 20 கப்பல்களும், MiG 29K, தேஜாஸ் மற்றும் நீண்ட தூர கடல் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானங்கள் உட்பட கிட்டத்தட்ட 50 விமானங்களும் பயிற்சியில் பங்கேற்கின்றன.

கடற்படை பயிற்சியில் பெரிய படை சூழ்ச்சிகள், மேம்பட்ட வான் பாதுகாப்பு நடவடிக்கைகள், நீர்மூழ்கி எதிர்ப்பு போர் மற்றும் மேற்பரப்பு எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை  மேற்கொள்ளப்படும் மிலன் கூட்டுப்பயிற்சி முதன்முதலில் கடந்த 1995-ஆம் ஆண்டு அந்தமான் மற்றும் நிக்கோபார் கடற்படை கட்டுப்பாட்டு மையத்தால் ஏற்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: VisakhapatnamMega Naval Exercise50 Nations ParticipatingIndiaus
ShareTweetSendShare
Previous Post

மாநிலங்களவைக்கு ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு!

Next Post

குடிசை வீடு to நீதிமன்றம் – நீதிபதியாகும் கூலித் தொழிலாளியின் மகள்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies