குடிசை வீடு to நீதிமன்றம் - நீதிபதியாகும் கூலித் தொழிலாளியின் மகள்!
Sep 17, 2026, 02:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடிசை வீடு to நீதிமன்றம் – நீதிபதியாகும் கூலித் தொழிலாளியின் மகள்!

Murugesan M by Murugesan M
Feb 20, 2024, 07:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாடு அரசு நடத்திய நீதிபதி தேர்வில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் சுதா வெற்றி பெற்றுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த மேட்டுப்பாளையம் ஊராட்சியில் உள்ளது நாலா நல்லூர் என்ற கிராமம். இந்த ஊரில் வசித்து வரும் கணேசன் – சந்திரா தம்பதியருக்கு மூன்றாவது மகளாகப் பிறந்தவர் சுதா.

இவர், ஒன்றாம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை அங்குள்ள அரசு பள்ளியில் பயின்றார். பின்னர், திருவாரூர் திரு.வி.க. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். இதனைத்தொடர்ந்து, திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று தேர்ச்சி பெற்றார்.

திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், தமிழக அரசு நடத்திய நீதிபதி தேர்வில், முதல் கட்டத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றார். அதன் பிறகு, இரண்டாம் கட்ட தேர்விலும் வெற்றி பெற்றார். திருவாரூர் மாவட்டத்தில் நீதிபதி  தேர்வில் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில், சுதா மட்டும் நீதிபதியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.

தனது வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள சுதா, “எங்கள் குடும்பம் சாதாரணக் குடும்பம். எங்க அப்பா கூலி வேலைக்குச் செல்பவர். நீதிபதியாக வேண்டும் என ஒரு  வைராக்கியத்தோடு படித்தேன். நான் சிறுவயதாக இருக்கும்போது முதல் தற்போது வரை எனது தாய்மாமன் படிப்புக்காக உதவி செய்து வருகிறார்.

நான் இரண்டு விசயத்தை உடைத்துள்ளதாக கருதுகிறேன். முதலில் பெரிய பெரிய அகாடமியில் சேர்ந்து பல லட்சம் பணம் கட்டி படித்தால்தான் வெற்றிபெற முடியும் என்பதை உடைத்துள்ளேன். அடுத்து,  இரண்டாவதாக, பெரிய பெரிய அதிகாரிகள் மகன், மகள்தான் வெற்றி பெற முடியும், சாதாரணமானவர்கள் வெற்றி பெற முடியாது என்பதை உடைத்துள்ளேன்.

அதாவது, என்னைப் போன்று சாதாரண மாணவர்களும் வெற்றி பெற முடியும் என்பதுதான் எனது சாதனை என்றார் மிக அடக்கமாக.  குடிசை வீட்டில்  இருந்து நீதிபதியாக  ஜொலிக்கப்போகும் சுதாவுக்கு, திருவாரூர் பெண்கள், சமூக சேவகர்கள், சட்ட அறிஞர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துமழை பொழிந்து வருகிறார்கள்.

Tags: JudgetiruvarurNala NallurSudha
Share
Tweet
SendShare
Previous Post

விசாகப்பட்டினத்தில் ‘மிலன் 24’ கடற்படை கூட்டுப் பயிற்சி தொடக்கம்!

Next Post

இருநாள் பயணமாக பிப்ரவரி 27ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

Related News

பிரதமர் மோடி பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies