ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி : அண்ணாமலை
Mar 15, 2026, 05:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி : அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Feb 22, 2024, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் பயணத்தில் பங்கேற்று அவர் உரையாற்றினார்.

அப்போது இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்ற முதல் யாத்திரை நமது என் மண் என் மக்கள் யாத்திரைதான். தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்றதில் அறிந்து கொண்ட உண்மை, தமிழக மக்கள் அரசியலில் நேர்மையான மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக பாஜகவின் யாத்திரையாக ஆரம்பித்த இந்தப் பயணம் இன்று மாபெரும் மக்கள் இயக்கமாக மாறி இருக்கிறது.

திமுக அரசின் 33 மாத கால ஊழல் ஆட்சியைத் தோலுரித்துக் காட்டிக் கொண்டிருக்கிறோம்.  பாரதப் பிரதமர் மோடியின், பத்தாண்டு கால நல்லாட்சியின் சாதனைகளை தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு செல்கிறோம். நமது என் மண் என் மக்கள் பயணத்தின் 234 ஆவது தொகுதி நிறைவு விழா, வரும் பிப்ரவரி 27 அன்று, திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியில் நடைபெறவிருக்கிறது. நமது பிரதமர் மோடி அந்த மாபெரும் வெற்றி விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கவிருக்கிறார். பிற மாநிலங்களை விட தமிழகத்துக்கு நமது பிரதமர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.

தமிழக அரசியல் நேர்மையாக இருந்த காலத்தில் மக்கள் பிரதிநிதிகளாக இருந்த, அரசியல் அனுபவம் வாய்ந்த, தலைவர்கள் அனைவரும் இன்று பாஜகவில் இருக்கிறார்கள். ஊழலற்ற ஆட்சி பாஜகவால் மட்டும்தான் தர முடியும் என்பதை அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். அடுத்த பத்து ஆண்டுகளில், நமது நாடு எப்படி இருக்க வேண்டும், அடுத்த 25 ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டும் என்ற தொலை நோக்குச் சிந்தனையோடு செயல்பட்டு வருவதால், கடந்த 1984 ஆம் ஆண்டு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த பாஜக, இன்று 303 பாராளுமன்ற உறுப்பினர்களோடு, தனிப் பெரும்பான்மை பெற்று இரண்டாவது முறையாகத் தொடர்ந்து ஆட்சி பொறுப்பில் இருக்கிறது.

அரவக்குறிச்சி இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலைவாய்ப்பு இல்லை. வேலை தேடி வெளியூர் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. தொகுதியில் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. மூன்று நதிகள் அருகில் ஓடியும் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை. இவை அனைத்தும் மாற வேண்டும். கரூரில், விவசாயம், நீர் மேலாண்மை, தொலை நோக்குப் பார்வையோடு திட்டங்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் வர வேண்டும். இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள், தொகுதியை முன்னேற்றுவதை விட, தங்களை முன்னேற்றிக் கொண்டார்கள்.

தொகுதி அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, தற்போது பண மோசடி வழக்கில் 280 நாட்களாக சிறையில் இருக்கிறார். இத்தனை நாட்களாக, துறை இல்லாத அமைச்சராக மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்ற அவர், இப்போதுதான் ஜாமீன் கிடைப்பதற்காக பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  அவரது தம்பி 280 நாட்களாகத் தலைமறைவாக இருக்கிறார். திமுகவில் 16 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

Tags: annamalai en maan en makkalarvakurichisenthilk balajibjpkarurannamalaiDMK
ShareTweetSendShare
Previous Post

இந்திய மாணவர்கள் படிக்க விரும்பும் வெளிநாடுகள் : முதல் இடத்தில் எந்த நாடு?

Next Post

உருவாகிறது முகேஷ் அம்பானியின் ‘ஹனூமான்’ என்ற ஓபன் AI!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies