நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள்: சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர்  ஆலோசனை
Oct 26, 2025, 06:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள்: சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர்  ஆலோசனை

Web Desk by Web Desk
Feb 23, 2024, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மாவட்ட ஆட்சியர்கள்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல்  தொடர்பாக, தமிழகத்தில் மேற்கெள்ள வேண்டிய பணிகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தொடங்கியுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் ஆணையர்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு கலந்துகொண்டனர். தலைமைத் தேர்தல் ஆணையருடன் துணை ஆணையர் தர்மேந்திர சர்மா, திதேஷ் நியாஸ், அஜய் பாலு ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட ஆட்சியர்கள்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஆலோசனை கூட்டத்தில் அவர்களிடம் இருந்து பரிந்துரைகள், கோரிக்கைகள் பெறப்படும்  அதைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. அதில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரிகளான சென்னை ஆணையர் மற்றும் இதர மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை துறை அதிகாரிகள். மாவட்ட எஸ்பிக்கள் ஆகியோர் சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

முதற்கட்டமாக அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சிகளுடன் சென்னையில் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட 10 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

தமிழகத்தில் உத்தேச தேர்தல் தேதி, வாக்குச்சாவடி, நடத்தை விதிகள் குறித்து இதில் ஆலோசிக்கப்படும் எனத் தகவல். மொத்தம் இரண்டு நாட்கள் இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ள நிலையில், இதில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் நடக்க உள்ளது.

இரண்டாம் நாளான நாளை காலை, 9 மணி முதல் 11 மணி வரை தமிழ்நாடு, கர்நாடகா, கேரள மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆலோசகர் கொண்ட குழு ஆலோசனையை நடத்துகிறது. அப்போது தங்கள் மாநிலங்களின் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் ஏற்பாடுகள் குறித்த தகவல்கள் அளிக்கப்படுகிறது.

அதன் பிறகு காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை, ஐடி துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு, சுங்கத்துறை, ரயில்வே பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் படை உள்ளிட்ட பல்வறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது. பிறகு தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோருடன் பிற்பகல் 2 மணி முதல், 3 மணிவரை ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் குழு திட்டமிட்டுள்ளது.

Tags: Advice of Chief Election Commissioner in Chennai
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – இங்கிலாந்து 4வது டெஸ்ட் : அறிமுக போட்டியிலே அசத்திய இந்திய வீரர்!

Next Post

ஐ.நா. சீர்திருத்தத்தை தடுப்பது எது? வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

Related News

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies