நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள்: சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர்  ஆலோசனை
Feb 15, 2026, 10:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள்: சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர்  ஆலோசனை

Murugesan M by Murugesan M
Feb 23, 2024, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மாவட்ட ஆட்சியர்கள்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல்  தொடர்பாக, தமிழகத்தில் மேற்கெள்ள வேண்டிய பணிகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தொடங்கியுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் ஆணையர்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு கலந்துகொண்டனர். தலைமைத் தேர்தல் ஆணையருடன் துணை ஆணையர் தர்மேந்திர சர்மா, திதேஷ் நியாஸ், அஜய் பாலு ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட ஆட்சியர்கள்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஆலோசனை கூட்டத்தில் அவர்களிடம் இருந்து பரிந்துரைகள், கோரிக்கைகள் பெறப்படும்  அதைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. அதில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரிகளான சென்னை ஆணையர் மற்றும் இதர மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை துறை அதிகாரிகள். மாவட்ட எஸ்பிக்கள் ஆகியோர் சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

முதற்கட்டமாக அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சிகளுடன் சென்னையில் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட 10 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

தமிழகத்தில் உத்தேச தேர்தல் தேதி, வாக்குச்சாவடி, நடத்தை விதிகள் குறித்து இதில் ஆலோசிக்கப்படும் எனத் தகவல். மொத்தம் இரண்டு நாட்கள் இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ள நிலையில், இதில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் நடக்க உள்ளது.

இரண்டாம் நாளான நாளை காலை, 9 மணி முதல் 11 மணி வரை தமிழ்நாடு, கர்நாடகா, கேரள மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆலோசகர் கொண்ட குழு ஆலோசனையை நடத்துகிறது. அப்போது தங்கள் மாநிலங்களின் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் ஏற்பாடுகள் குறித்த தகவல்கள் அளிக்கப்படுகிறது.

அதன் பிறகு காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை, ஐடி துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு, சுங்கத்துறை, ரயில்வே பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் படை உள்ளிட்ட பல்வறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது. பிறகு தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோருடன் பிற்பகல் 2 மணி முதல், 3 மணிவரை ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் குழு திட்டமிட்டுள்ளது.

Tags: Advice of Chief Election Commissioner in Chennai
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – இங்கிலாந்து 4வது டெஸ்ட் : அறிமுக போட்டியிலே அசத்திய இந்திய வீரர்!

Next Post

ஐ.நா. சீர்திருத்தத்தை தடுப்பது எது? வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

Related News

இந்து மன்னருக்கு பெருகும் ஆதரவு – நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி ?

டி-20 லீக் போட்டி – இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி அல்ல ‘போர்’

நிஜ்ஜார் வழக்கில் கனடாவுடன் சேர்ந்து பணியாற்ற இந்தியா விருப்பம்!

இளம் இந்திய வீரர்களை கண்டு பாகிஸ்தானுக்கு தான் பயம் அதிகம் -கிரிக்கெட் வியூக வகுப்பாளர் பாஸ்கி

30 ஆண்டுகளாக போராட்டம் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக இரு கிராம மக்கள் எச்சரிக்கை!

வி.கே.சசிகலா தலைமையில் வரும் 24-ஆம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சியிடமிருந்து 1,400 ஏக்கர் நிலத்தை மீட்க போராடிய விவசாயிகள் கைது!

தனியார் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா மாணவர்களின் நிகழ்த்திய முருகர் நாடகம்.. பார்த்து வியந்த பார்வையாளர்கள்!

வெள்ளியங்கிரியில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்!

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில், நாட்டியாஞ்சலி விழா – உள்நாட்டு, வெளிநாட்டு கலைஞர்கள்பங்கேற்பு

காங்கிரஸ் குறித்து தொடர்ந்து சர்ச்சை கருத்து -அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்க இருந்த கட்சி பொதுக்கூட்டங்கள் திடீர் ரத்து

இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த விருப்பம் -வங்கதேசத்தில் வென்ற BNP கட்சி அறிவிப்பு

மகா சிவராத்திரியை ஒட்டி திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

ஆட்சியில் பங்கு , அதிக சீட்டுகள் – மாணிக்கம் தாகூர் முன்னிலையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் ஆண்டு விழாவில் நடனம் ஆடி அசத்திய பிரபுதேவா!

ஏஐ 18 மாதங்களில் வேலை வாய்ப்பு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் – மைக்ரோசாப்ட் அதிகாரி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies