"எனது பாரதம், எனது குடும்பம்"- பிரதமர் மோடி
Mar 15, 2026, 10:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“எனது பாரதம், எனது குடும்பம்”- பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 5, 2024, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, எனக்கு குடும்பம் இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. தேசத்தின் 140 கோடி மக்களும் எனது குடும்பத்தினர். எனது பாரதம் எனது குடும்பம் என்று தெரிவித்தார். தொடர்ந்து, ‘எனது பாரதம் எனது குடும்பம்’ என்று கூறி பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தள கணக்கில், ‘சௌகிதார்’ (chowkidar) என்று தனது பெயருக்கு முன்னால் சேர்த்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் என பலரும் தங்கள் பெயருக்கு முன்னாள் சௌகிதார் என்ற பெயரை சேர்த்துக் கொண்டனர். ‘சௌகிதார்’ என்ற சொல்லுக்கு ‘காவலாளி’ என்று அர்த்தம்.

இதுகுறித்து அன்று பிரதமர் மோடி கூறியதாவது, உங்கள் சௌகிதார் உறுதியாக நின்று நாட்டிற்கு சேவை செய்கிறார். ஆனால், நான் தனியாக இல்லை. நாட்டில் உள்ள ஊழல், சமூகக் கொடுமைக்கு எதிராகப் போராடும் ஒவ்வொருவரும் சௌகிதார்கள். ஆதலால், நான் தனியாக இல்லை. தேசத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கும் ஒவ்வொருவரும் சௌகிதார்தான். இன்று ஒவ்வொரு இந்தியரும் ‘நானும் சௌகிதார்தான்’ என்று பெருமையாக கூறுகிறார்கள் என்று தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலின் போது, பிரதமர் மோடியின் சௌகிதார் பிரச்சாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மக்கள் அனைவரும் பிரதமர் மோடியின் பக்கம்தான் என்பதை தேர்தல் முடிவு உணர்த்தியது.

2019 மக்களவைத் தேர்தலில், பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்று,  நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் உயர்வுக்காகவும் தொடர்ந்து, பணியாற்றி வருகிறார்.

இரவு பகல் பாராது, தேசத்திற்காகவும், மக்களுக்காகவும் உழைத்து வரும் பிரதமர் மோடியை, லாலு பிரசாத் யாதவ் விமர்சித்துள்ளார்.  பாட்னாவில் ‘இண்டி’ கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவ் மேற்கொண்ட யாத்திரையின் நிறைவு விழாவில், உரையாற்றிய அவர் ,”நரேந்திர மோடிக்கு  குடும்பம் இல்லை” என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, நாங்கள் ‘மோடியின் குடும்பம்’ என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பாஜக தலைவர்கள், பாஜக தொண்டர்கள் என அனைவரும், தங்களுடைய சமூக வலைத்தளங்களில், தங்கள் பெயர்களுக்கு பின்னால், ‘மோடியின் குடும்பம்’ (Modi Ka Parivar) என்று சேர்த்துள்ளனர்.

இந்த நிலையில், தெலுங்கானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, எனக்கு குடும்பம் இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இந்த நாட்டின் 140 கோடி மக்கள்தான் எனது குடும்பம். எனது பாரதம் எனது குடும்பம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, பாஜகவினர் ‘எனது பாரதம், எனது குடும்பம்’ என்று கூறி பிரச்சாரம் செய்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியை எவ்வாறு விமர்சித்தாலும், அதுவே பிரதமர் மோடிக்கு வெற்றியாக அமைந்து விடுகிறது.

Tags: PM ModiModilalu prasad yadavModi Ka Parivar
ShareTweetSendShare
Previous Post

பண்ருட்டியில் தீ மிதி திருவிழா – அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

Next Post

உலகின் மிக வயதான மூதாட்டி : தனது 117வது பிறந்தநாளைக் கொண்டாடினார்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies