"எனது பாரதம், எனது குடும்பம்"- பிரதமர் மோடி
Jul 29, 2026, 09:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“எனது பாரதம், எனது குடும்பம்”- பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 5, 2024, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, எனக்கு குடும்பம் இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. தேசத்தின் 140 கோடி மக்களும் எனது குடும்பத்தினர். எனது பாரதம் எனது குடும்பம் என்று தெரிவித்தார். தொடர்ந்து, ‘எனது பாரதம் எனது குடும்பம்’ என்று கூறி பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தள கணக்கில், ‘சௌகிதார்’ (chowkidar) என்று தனது பெயருக்கு முன்னால் சேர்த்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் என பலரும் தங்கள் பெயருக்கு முன்னாள் சௌகிதார் என்ற பெயரை சேர்த்துக் கொண்டனர். ‘சௌகிதார்’ என்ற சொல்லுக்கு ‘காவலாளி’ என்று அர்த்தம்.

இதுகுறித்து அன்று பிரதமர் மோடி கூறியதாவது, உங்கள் சௌகிதார் உறுதியாக நின்று நாட்டிற்கு சேவை செய்கிறார். ஆனால், நான் தனியாக இல்லை. நாட்டில் உள்ள ஊழல், சமூகக் கொடுமைக்கு எதிராகப் போராடும் ஒவ்வொருவரும் சௌகிதார்கள். ஆதலால், நான் தனியாக இல்லை. தேசத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கும் ஒவ்வொருவரும் சௌகிதார்தான். இன்று ஒவ்வொரு இந்தியரும் ‘நானும் சௌகிதார்தான்’ என்று பெருமையாக கூறுகிறார்கள் என்று தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலின் போது, பிரதமர் மோடியின் சௌகிதார் பிரச்சாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மக்கள் அனைவரும் பிரதமர் மோடியின் பக்கம்தான் என்பதை தேர்தல் முடிவு உணர்த்தியது.

2019 மக்களவைத் தேர்தலில், பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்று,  நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் உயர்வுக்காகவும் தொடர்ந்து, பணியாற்றி வருகிறார்.

இரவு பகல் பாராது, தேசத்திற்காகவும், மக்களுக்காகவும் உழைத்து வரும் பிரதமர் மோடியை, லாலு பிரசாத் யாதவ் விமர்சித்துள்ளார்.  பாட்னாவில் ‘இண்டி’ கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவ் மேற்கொண்ட யாத்திரையின் நிறைவு விழாவில், உரையாற்றிய அவர் ,”நரேந்திர மோடிக்கு  குடும்பம் இல்லை” என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, நாங்கள் ‘மோடியின் குடும்பம்’ என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பாஜக தலைவர்கள், பாஜக தொண்டர்கள் என அனைவரும், தங்களுடைய சமூக வலைத்தளங்களில், தங்கள் பெயர்களுக்கு பின்னால், ‘மோடியின் குடும்பம்’ (Modi Ka Parivar) என்று சேர்த்துள்ளனர்.

இந்த நிலையில், தெலுங்கானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, எனக்கு குடும்பம் இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இந்த நாட்டின் 140 கோடி மக்கள்தான் எனது குடும்பம். எனது பாரதம் எனது குடும்பம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, பாஜகவினர் ‘எனது பாரதம், எனது குடும்பம்’ என்று கூறி பிரச்சாரம் செய்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியை எவ்வாறு விமர்சித்தாலும், அதுவே பிரதமர் மோடிக்கு வெற்றியாக அமைந்து விடுகிறது.

Tags: PM ModiModilalu prasad yadavModi Ka Parivar
ShareTweetSendShare
Previous Post

பண்ருட்டியில் தீ மிதி திருவிழா – அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

Next Post

உலகின் மிக வயதான மூதாட்டி : தனது 117வது பிறந்தநாளைக் கொண்டாடினார்!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies