காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுரேஷ் பச்சோரி பாஜகவில் இணைந்தார்!
Mar 19, 2026, 04:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுரேஷ் பச்சோரி பாஜகவில் இணைந்தார்!

Murugesan M by Murugesan M
Mar 9, 2024, 08:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த அரசியல் தலைவரும், காந்திஜிக்கு நெருக்கமான சுரேஷ் பச்சோரி பாஜகவில் இணைந்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் பச்சோரி, முன்னாள் எம்.பி., கஜேந்திர சிங் ராஜுகேடி மற்றும் அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உட்பட பலர் இன்று பாஜகவில் இணைந்தனர்.

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், மாநில பாஜக தலைவர் வி.டி. சர்மா, முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் முன்னிலையில் பச்சோரி, ராஜுகேடி மற்றும் பிற தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) இணைந்தனர்.

சுரேஷ் பச்சோரி முன்னாள் மத்திய மந்திரியாக இருந்துள்ளார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பாதுகாப்பு துறையின் இணை மந்திரியாக இருந்துள்ளார். மேலும், நான்கு முறை மாநிலங்களை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவருடன் முன்னாள் எம்.பி. கஜேந்திர சிங் ராஜுகெதி, முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் (சஞ்சய் சுக்லா. அர்ஜுன் பாலியா, விஷல் பட்டேல்) மற்றும் பலர் இன்று பா.ஜனதாவில் இணைந்தனர்.

காந்தி குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் பச்சோரி. காங்கிரஸ் கட்சியில் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் குழுவில் உள்ள ஒரு நபராக இருந்தவர். மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தபோது சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். அம்மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார்.

காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான சுரேஷ் பச்சோரி, மத்திய பாதுகாப்பு (பாதுகாப்பு உற்பத்தி மற்றும் பொருட்கள்) இணை அமைச்சராக இருந்தார், மேலும் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினராகவும் நான்கு முறை பணியாற்றினார்.

பழங்குடியினரின் முக்கியத் தலைவரான ராஜுகேடி, 1998, 1999 மற்றும் 2009 ஆகிய மூன்று முறை காங்கிரஸ் சார்பில் தார் (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸில் சேருவதற்கு முன்பு, 1990 இல் பிஜேபி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Gandhiji's close friend Suresh Bachori joins BJP!
ShareTweetSendShare
Previous Post

ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது எப்படி? – பரபரப்பு தகவல்

Next Post

13-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies