ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது எப்படி? - பரபரப்பு தகவல்
Jun 22, 2026, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது எப்படி? – பரபரப்பு தகவல்

Murugesan M by Murugesan M
Mar 9, 2024, 08:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக், போலீசாரால் கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருளான சூடோபெட்ரினை தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஒரு கும்பல் கடத்தி வந்தது.

இது தகவல் அறிந்த டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் வைத்து, சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக் குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ வேதி பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ 2000 கோடியாகும்.

கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தவர் ஜாபர் சாதிக் என கண்டறிந்தனர்.

இதனையடுத்து, ஜாபர் சாதிக் 26 -ம் தேதி டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். அவரது வீட்டிலும் நோட்டீஸ் ஒட்டினர். ஆனால் ஜாபர் சாதிக் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இதனால், ஜாபர் சாதிக்கை எப்படியாவது பிடித்துவிடவேண்டும் என டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, ஜாபர் சாதிக் சிக்கியது எப்படி என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதில், ஜாபர் சாதிக் நெருங்கிய நண்பர்கள் யார் யார், உறவினர்கள் எங்கு உள்ளனர் என லிஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. அவர் அடிக்கடி செல்லுமிடம் மற்றும் தொழில் கூட்டாளிகள் உள்ளிட்டவை குறித்து ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி முக்கிய தகவல்களை பெற்றனர்.

மேலும், போலீஸ் தேடுவதால் ஜாபர் சாதிக் புதிய செல்போன் எண்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து, ஜாபர் சாதிக் பயன்படுத்தும் புதிய செல்போன் எண்ணை கைப்பற்றினர். அந்த புதிய செல் போன் சிக்னலை வைத்து ஜாபர் சாதிக்கை போலீசார் தட்டித்தூக்கியுள்ளனர்.

Tags: How was Zafar Sadiq arrested?
ShareTweetSendShare
Previous Post

லோக்சபா தேர்தலில் ராகுல் தோற்பது உறுதி! – அனுராக் தாக்கூர்

Next Post

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுரேஷ் பச்சோரி பாஜகவில் இணைந்தார்!

Related News

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies