தேர்தல் முடிந்ததும் வாக்குறுதிகளை மறந்து விடும் எதிர்கட்சிகள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Jul 21, 2025, 11:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் முடிந்ததும் வாக்குறுதிகளை மறந்து விடும் எதிர்கட்சிகள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Mar 10, 2024, 05:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முந்தைய ஆட்சியாளர்கள் தேர்தல் முடிந்ததும் வாக்குறுதிகளை மறந்து விடுவார்கள் என எதிர்கட்சியினர் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கார்க்கில் நடைபெற்ற விழாவில் அசம்கர், ஷ்ரவஸ்தி, சித்ரகூட் மற்றும் அலிகார் விமான நிலையங்களையும், லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.ரூ.108 கோடி செலவில் கட்டப்பட்ட மகாராஜா சுஹேல் தேவ் மாநில பல்கலைக்கழகத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

பின்னர் விழாவில் பேசிய பிரதமர் மோடி, உத்தரபிரதேசத்தில் ‘இரட்டை இயந்திர ஆட்சியைப் பாராட்டினார், மேலும் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள அசம்கர் மாவட்டம் இனி ‘அஜன்மகர்’ என்று அழைக்கப்படும் என்று கூறினார். ஒரு காலத்தில் பின்தங்கியதாகக் கருதப்பட்ட அசம்கர் இன்று ஒளிரும் நட்சத்திரமாக விளங்கி வருவதாகவும் மோடி தெரிவித்தார்.

ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் சமீபத்திய கருத்துக்கு மீண்டும் கண்டனம் தெரிவித்த பிரதமர், 140 கோடி இந்தியர்கள் தமது குடும்பம் என்று கூறினார்.மோடிக்கு சொந்த குடும்பம் இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் நாட்டின் 140 கோடி மக்களும் ‘மோடி கா பரிவார்’” என்று பிரதமர் மோடி கூறினார்.

2019-ல் நாங்கள் போட்ட அடிக்கல் தேர்தலுக்காக அல்ல. நாங்கள் அடிக்கல் நாட்டிய அனைத்து திட்டங்களும் வெளிப்படையாக நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற நான் உழைக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.

கடந்த சில நாட்களாக, புதிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள்,எய்ம்ஸ் மருத்துவமனைகள் துவக்கி வைப்பதை அறிந்த மக்கள் ஆச்சர்யம் அடைகின்றனர். சிலர் தேர்தல் நேரம் வருவதால் அனைத்தும் தொடங்கி வைக்கப்படுவதாக எண்ணுகின்றனர்.

ஆனால் முன்பு ஆட்சியில் இருந்த தலைவர்கள் மக்களை முட்டாளாக்கும் அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என்றும், தேர்தல்கள் முடிந்ததும் அதனை மறந்து விடுவார்கள் என மோடி தெரிவித்தார். நாட்டில் தற்போது நடந்து வரும் நகரமயமாக்கல் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க வேண்டியது. ஆனால், அதனை நாங்கள் வாய்ப்பாக தற்போது செயல்படுத்தி வருகிறோம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில், 11,500 கோடி மதிப்பிலான ஐந்து பெரிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.3,700 கோடி மதிப்பிலான பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் 59 உத்தரபிரதேச மாவட்டங்களில் கட்டப்பட்ட 5,342 கிமீ சாலைகளையும் அவர் திறந்து வைத்தார்.

Tags: Ajanmagarh'PM ModiModiuttar pradeshlalu prasad yadav
ShareTweetSendShare
Previous Post

மதுரை வனப்பகுதியில் பயங்கர தீ விபத்து!

Next Post

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் வெற்றி!

Related News

13,700 அடி உயரத்தில் விமானப்படை தளம் : சீனாவுக்கு சவால் அளிக்கும் இந்தியா!

ராணுவ வலிமை பட்டியல் : 4ம் இடம் பிடித்த இந்தியா – பின்னடைவை சந்தித்த பாகிஸ்தான்!

IRON DOME கூட தடுக்காது : இந்தியாவின் நவீன ஹைப்பர்சோனிக் ET-LDHCM ஏவுகணை!

கடைமடைக்கு வராத தண்ணீர் : கெலவரப்பள்ளி விவசாயிகள் புகார்!

துார் வார ஒதுக்கிய ரூ.97 கோடி எங்கே? : பாலைவனமாக மாறிய பனைமரத்துப்பட்டி ஏரி!

திருநங்கையாக 20 ஆண்டுகள் : வங்கதேச இளைஞர் சிக்கியது எப்படி?

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவை கலக்கிய கார் திருடன் சிக்கியது எப்படி?

புதுப்பொலிவு பெறும் விக்டோரியா அரங்கம்!

80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிகாவில் ஓடிய நதி – ஆய்வில் புதிய தகவல்!

பற்றி எரியும் குப்பை கிடங்கு : சுவாசக்கோளாறால் மூச்சு திணறும் மக்கள்!

வேதனையில் ஏழை மாணவிகள் : மூடப்படும் தெரசா மகளிர் கிளை ஆராய்ச்சி மையம்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பத்து படுகொலைகள் நிகழ்ந்துள்ளன : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சி இருக்கும் வரை, தமிழகத்திற்கு விடிவு காலம் இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தென்காசியில் வர்த்தக கண்காட்சியை தொடங்கி வைத்த ஸ்ரீதர் வேம்பு!

அதிமுக உட்கட்சி விவகாரம் : விரைவாக விசாரித்து முடிக்கப்படும் – சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி!

வங்கதேசம் : கல்லூரி வளாகத்தில் விழுந்து நொறுங்கிய விமானம் – 19 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies