தேர்தல் முடிந்ததும் வாக்குறுதிகளை மறந்து விடும் எதிர்கட்சிகள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Aug 10, 2026, 10:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் முடிந்ததும் வாக்குறுதிகளை மறந்து விடும் எதிர்கட்சிகள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Mar 10, 2024, 05:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முந்தைய ஆட்சியாளர்கள் தேர்தல் முடிந்ததும் வாக்குறுதிகளை மறந்து விடுவார்கள் என எதிர்கட்சியினர் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கார்க்கில் நடைபெற்ற விழாவில் அசம்கர், ஷ்ரவஸ்தி, சித்ரகூட் மற்றும் அலிகார் விமான நிலையங்களையும், லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.ரூ.108 கோடி செலவில் கட்டப்பட்ட மகாராஜா சுஹேல் தேவ் மாநில பல்கலைக்கழகத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

பின்னர் விழாவில் பேசிய பிரதமர் மோடி, உத்தரபிரதேசத்தில் ‘இரட்டை இயந்திர ஆட்சியைப் பாராட்டினார், மேலும் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள அசம்கர் மாவட்டம் இனி ‘அஜன்மகர்’ என்று அழைக்கப்படும் என்று கூறினார். ஒரு காலத்தில் பின்தங்கியதாகக் கருதப்பட்ட அசம்கர் இன்று ஒளிரும் நட்சத்திரமாக விளங்கி வருவதாகவும் மோடி தெரிவித்தார்.

ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் சமீபத்திய கருத்துக்கு மீண்டும் கண்டனம் தெரிவித்த பிரதமர், 140 கோடி இந்தியர்கள் தமது குடும்பம் என்று கூறினார்.மோடிக்கு சொந்த குடும்பம் இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் நாட்டின் 140 கோடி மக்களும் ‘மோடி கா பரிவார்’” என்று பிரதமர் மோடி கூறினார்.

2019-ல் நாங்கள் போட்ட அடிக்கல் தேர்தலுக்காக அல்ல. நாங்கள் அடிக்கல் நாட்டிய அனைத்து திட்டங்களும் வெளிப்படையாக நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற நான் உழைக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.

கடந்த சில நாட்களாக, புதிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள்,எய்ம்ஸ் மருத்துவமனைகள் துவக்கி வைப்பதை அறிந்த மக்கள் ஆச்சர்யம் அடைகின்றனர். சிலர் தேர்தல் நேரம் வருவதால் அனைத்தும் தொடங்கி வைக்கப்படுவதாக எண்ணுகின்றனர்.

ஆனால் முன்பு ஆட்சியில் இருந்த தலைவர்கள் மக்களை முட்டாளாக்கும் அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என்றும், தேர்தல்கள் முடிந்ததும் அதனை மறந்து விடுவார்கள் என மோடி தெரிவித்தார். நாட்டில் தற்போது நடந்து வரும் நகரமயமாக்கல் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க வேண்டியது. ஆனால், அதனை நாங்கள் வாய்ப்பாக தற்போது செயல்படுத்தி வருகிறோம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில், 11,500 கோடி மதிப்பிலான ஐந்து பெரிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.3,700 கோடி மதிப்பிலான பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் 59 உத்தரபிரதேச மாவட்டங்களில் கட்டப்பட்ட 5,342 கிமீ சாலைகளையும் அவர் திறந்து வைத்தார்.

Tags: PM ModiModiuttar pradeshlalu prasad yadavAjanmagarh'
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை வனப்பகுதியில் பயங்கர தீ விபத்து!

Next Post

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் வெற்றி!

Related News

கைகொடுக்காத தென்மேற்கு பருவமழை – கைகொடுக்கும் கிருஷ்ணா நதிநீர்!

இபிஎஸ்-ஸின் தவறான முடிவால் கோடிகளை இழந்து 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் – எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!

மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சர் மமதா பானர்ஜியின் கார் மீது கற்களை வீசி தாக்குதல்!

பெங்களூருவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 105 பேர் கைது!

தேசிய கொடியை ஏந்தும் போது கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் தேச உணர்வும், ஒரே சிந்தனையும் வரவேண்டும் – நயினர் நாகேந்திரன்

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம்!

ஏஐ. காரணமாக மென்பொருள் பொறியாளர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறி ; ஸ்ரீதர் வேம்பு

ஆபரேஷன் சிந்தூரில் நடந்தது என்ன? : தாக்குதல்களை முடிப்பதற்கு முன்பே போர்நிறுத்தத்திற்கு கெஞ்சிய பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பிறப்புரிமை குடியுரிமைக்கு தடை : புதிய உத்தரவு பிறப்பித்த ட்ரம்ப் : அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு கொடுக்கப்படும் பதவி லஞ்சமாகத்தான் கருதப்படும் – திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்

மற்றொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம் : ஷேக் ஹசீனாவின் மகன் எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

ஆடி அமாவாசை – காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் குவியும் பக்தர்கள்!

மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் அல்லது பண உதவிகளை மருத்துவர்கள் பெறக்கூடாது – சுகாதார அமைச்சகம் உத்தரவு!

கோவையில் நடைபெறும் சுதேசி கண்காட்சி 2026 – பார்வையாளர்களை கவர்ந்த ஆபரேஷன் சிந்தூர் புத்தக ஸ்டால்!

கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மிகத்தின் சிறப்பிடமாக புதுச்சேரி திகழ்கிறது – அமித் ஷா புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies