தேசத்தை கட்டியெழுப்பவே வளர்ச்சி பணிகள், தேர்தலுக்காக அல்ல : பிரதமர் மோடி
May 25, 2025, 08:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசத்தை கட்டியெழுப்பவே வளர்ச்சி பணிகள், தேர்தலுக்காக அல்ல : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Mar 12, 2024, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசின் வளர்ச்சி பணிகள் தேசத்தை கட்டியெழுப்புவதே தவிர, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத் சபர்மதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 புதிய  வந்தே பாரத் ரயில்கள் தொடங்குதல் உள்ளிட்ட ரூ.85,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் பேசிய பிரதமர், சிலர் எங்களின் முயற்சிகளை தேர்தல் கண்ணோட்டத்தில் பார்க்க முயல்கிறார்கள். நாங்கள் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது தேர்தலுக்காக அல்ல. தேசத்தை கட்டி எழுப்புவதற்காக தான் என தெரிவித்தார். கடந்த தலைமுறை அனுபவித்த துன்பங்களை தற்போதைய இளைஞர்கள் அனுபவிக்க மாட்டார்கள். இது மோடி அரசின் உத்தரவாதம் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில், ரயில்வே மேம்பாட்டிற்காக தனது அரசாங்கம்  6 மடங்கு அதிக தொகையை செலவிட்டதாக பிரதமர் கூறினார்.

2024 ஆம் ஆண்டின் இரண்டு மாதங்களில், 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான  திட்டங்களுக்கு தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டியுள்ளோம். எனது வாழ்க்கையை ரயில்வே தண்டவாளத்தில் தொடங்கினேன், எனவே எங்கள் ரயில்வே முன்பு எவ்வளவு மோசமாக இருந்தது என்பது எனக்கு நன்றாக தெரியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

தனி ரயில்வே பட்ஜெட்டை நிறுத்திவிட்டு, மத்திய பட்ஜெட்டில் சேர்த்துள்ளதாகவும், அதனால் ரயில்வே மேம்பாட்டிற்கு அரசுப் பணம் பயன்படுத்தப்படும் என்றும் மோடி கூறினார். இதுவரை, 350 ‘ஆஸ்தா’ ரயில்கள் மூலம் 4.5 லட்சம் பேர் அயோத்திக்குச் செல்ல வசதி செய்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: PM ModiAhmedabadVande Bharat trainsmission to build nation
ShareTweetSendShare
Previous Post

மாசாணி அம்மன் கோவிலில் குவியும் பெண் பக்தர்கள்!

Next Post

எழுத்தாளர் கண்ணையன் தட்சிணா மூர்த்திக்கு அண்ணாமலை வாழ்த்து!

Related News

பாகிஸ்தானுக்கு ஆதரவு ஏன்? : U -TURN அடித்த ட்ரம்ப் – குழம்பும் வெள்ளை மாளிகை!

பாக்.,கிற்கு ரூ.30,000 கோடி இழப்பு : சின்னாபின்னமான பாகிஸ்தான் விமானப்படை!

சுற்றுலாப்பயணிகள் அதிருப்தி : மதுப்பிரியர்கள் கூடாரமான சாலையோர பூங்காங்கள்!

கேள்விக்குறியான வாழ்வாதாரம் : நத்தை வேகத்தில் நடக்கும் மேம்பால பணியால் தவிப்பு!

அமெரிக்காவின் GOLDEN DOME : அதிநவீன வான்வெளி ஏவுகணை பாதுகாப்பு!

ஹார்வர்ட் Vs ட்ரம்ப் : சர்வதேச மாணவர்கள் சேர்க்கைக்கு செக்!

Load More

அண்மைச் செய்திகள்

11 மணி உதயநிதி : திமுகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்!

பாமகவுக்கு நான் தான் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி முழு ஆதரவு!

பணியிடங்களில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து மரியாதையுடன் நடத்தும் வகையில் சட்டம் இயற்றவேண்டும் – பிரதமர் மோடி

கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை!

சொத்து வரி உயர்வுக்கு இபிஎஸ் கண்டனம்!

மாவோயிஸ்ட் தலைவர் உட்பட இருவர் சுட்டுக்கொலை : 24 மாவோயிஸ்டுகள் சரண் – பாதுகாப்புப் படையினர் தகவல்!

திமுக என்றாலே ஊழல் : எச். ராஜா விமர்சனம்!

நாகாலாந்து ஆளுநர் இல. கணேசனின் 80-வது பிறந்தநாள் விழா : ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் வாழ்த்து!

பஹல்காம் தாக்குதலுக்கு பின்னால் மிகப்பெரிய சதி – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies