மாசாணி அம்மன் கோவிலில் குவியும் பெண் பக்தர்கள்!
Sep 13, 2026, 02:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாசாணி அம்மன் கோவிலில் குவியும் பெண் பக்தர்கள்!

Murugesan M by Murugesan M
Mar 12, 2024, 01:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை மாவட்டம், ஆனைமலையில் அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. சங்க காலத்தில் நன்னன் என்னும் மன்னன் ஆண்டு வந்த நன்னனூர் தற்போது ஆனைமலை என்று அழைக்கப்பட்டு வருகிறது.

நன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட உப்பாற்றங்கரையின் அருகே உள்ள அரசு தோட்டத்தில் வளர்ந்த மாமரத்தின் கிளைகளையோ, காய்களையோ, கனிகளையோ யாரும் பயன்படுத்தக்கூடாது என்பது மன்னனின் உத்தரவு.

ஒருநாள் ஆற்றில் தனது வயது கொண்ட பெண்களோடு நீராட வந்த ஒரு இளம் பெண் அந்த மாமரத்தில் இருந்து தானாகவே ஆற்றில் உதிர்ந்து வந்த மாங்கனியை உண்டுவிட்டாள்.

இதனை அறிந்த நன்னன் அப்பெண்ணைக் கொலை செய்துவிடும்படி உத்திரவிட்டான். ஆனால், அவளது தந்தை தனது மகளின் எடையளவு தங்கத்தால் செய்த பாவை ஒன்றையும், எண்பத்தொரு ஆண் யானைகளையும் அறியாது செய்த தவறுக்கான தண்டம் செலுத்துவதாகக் கூறினார்.

ஆனால், மன்னன் அதனை ஏற்காமல் அப்பெண்ணைக் கொலை செய்ய உத்தரவிட்டான். கொலையுண்ட அந்தப் பெண்ணை மயானத்தில் சமாதிபடுத்தி, அதன்மீது அந்த பெண் போன்ற ஒரு உருவத்தை அமைத்து மயானத்தில் சயனித்த நிலையில் இருந்த அந்த பெண் நாளடைவில் மாசாணி என்று அழைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.

இப்படி பெருமை வாய்ந்த பொள்ளாச்சி மாசாணி அம்மன் திருக்கோவிலில், வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி மற்றும் விழா காலங்களில் பக்தர்களின் வருகை வழக்கத்தைவிட அதிக அளவில் இருக்கும். குறிப்பாக, சுமார் 5 லட்சத்துக்கு அதிகமானோர் வந்து செல்கின்றனர்.

இங்கு அம்மனை தரிசனம் செய்வதன் மூலம், தங்களுக்கு வரும் துன்பங்கள் யாவும் நீங்குவதாகவும், கடன் குறைவதாகவும், எதிரிகளே இல்லாத நிலை ஏற்படுவதாகவும், பக்தர்கள் மெய்மறந்து சொல்கிறார்கள்.

இதனால், இந்த கோவிலுக்கு கோவை, திருப்பூர், கரூர் எனக் கொங்கு மண்டலம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இருந்தும் பொது மக்கள் குவிந்து வருகின்றனர்.

Tags: Female devotees gather at Masani Amman Temple!
Share
Tweet
SendShare
Previous Post

அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் ராஜினாமா!

Next Post

தேசத்தை கட்டியெழுப்பவே வளர்ச்சி பணிகள், தேர்தலுக்காக அல்ல : பிரதமர் மோடி

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies