வணிக அடிப்படையில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை: பிரதமர் மோடி
Oct 6, 2025, 03:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வணிக அடிப்படையில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை: பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Mar 13, 2024, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வணிக அடிப்படையில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மற்றும் அசாமில் சுமார் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பில்  3 செமிகண்டக்டர் ஆலைகளுக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

அப்போது பேசிய அவர், இன்று, நாம் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறியுள்ளோம். சுமார் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான செமிகண்டக்டர் உற்பத்திக்கான மூன்று பெரிய திட்டங்களை இந்தியாவில் துவக்கியுள்ளோம். இந்த திட்டங்கள் இந்தியாவை குறைக்கடத்தி உற்பத்தியில் உலகளாவிய மையமாக மாற்ற உதவும் என தெரிவித்தார்.

இந்த முயற்சி இளைஞர்களின்  தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அவர்களின் தலைவிதியை மாற்றும், 21ஆம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்டது என்றும், மின்னணு சிப் இல்லாமல் கற்பனை செய்து பார்க்க முடியாது என்றும் பிரதமர் கூறினார்.

‘மேட் இன் இந்தியா சிப்’ மற்றும் ‘டிசைன்ட் இன் இந்தியா சிப்’ ஆகியவை நாட்டை தன்னம்பிக்கை மற்றும் நவீனத்துவத்தை நோக்கி அழைத்துச் செல்லும் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியா ஏற்கனவே  விண்வெளி தொழில்நுட்பம், அணுசக்தி மற்றும் டிஜிட்டல் சக்தியாக உள்ளது. வரும் காலத்தில், குறைக்கடத்திகள் மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளின் வணிக உற்பத்தியைத் தொடங்குவோம். இந்தியா விரைவில் இந்தத் துறையிலும் உலகளாவிய சக்தியாக மாறும் என்று அவர் கூறினார்.

ஆத்மநிர்பார் மற்றும் மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய உற்பத்தியாளர்களை உலகளவில் போட்டியிட  செய்யவும், முதலீடுகளை ஈர்க்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியாவை ஒருங்கிணைக்கவும், ஊக்கத் திட்டங்களை (பிஎல்ஐ) அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.

பல்வேறு காரணங்களால், முதல் மற்றும் இரண்டாவது தொழிற்புரட்சிகளின் போது இந்தியா பின்தங்கி இருந்தது.  இருப்பினும், இந்தியா தொழில்துறை 4.0 இல் நம்பிக்கையுடன் முன்னோடியாக உள்ளது.

குறைக்கடத்தி தொழில் என்பது தனித்து நிற்கும் துறை அல்ல. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு போன்ற பல துறைகளுடன்  இணைந்துள்ளது. உலகப் பொருளாதாரத்தில், இந்தத் துறையிலிருந்து வருவாய் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Tags: semiconductor plantPM ModiIndiaAssamgujaratsemiconductor chips
ShareTweetSendShare
Previous Post

முந்தைய காங்கிரஸை விட பாஜக அரசு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்குகிறது! – மத்திய அமைச்சர் முரளீதரன்

Next Post

மும்பை விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்!

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies