அமைதியை ஊக்குவிக்கும் கேரள கலாச்சாரம், வன்முறை அரசியலை நம்பும் எதிர்கட்சிகள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைதியை ஊக்குவிக்கும் கேரள கலாச்சாரம், வன்முறை அரசியலை நம்பும் எதிர்கட்சிகள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Mar 15, 2024, 05:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள கலாச்சாரம் அமைதியை ஊக்குவிப்பதாகவும், ஆனால் UDF,LDF கட்சிகள் வன்முறை அரசியலில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

அடுத்த சில நாட்களில் ஈஸ்டர் பண்டிகை வரப் போகிறது. இந்த நாள் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை நமக்கு நினைவூட்டுகிறது. ஈஸ்டர் திருநாளில் உங்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  ராம நவமியும் ஹோலியும் நெருங்கிவிட்டன.புனித மாதம் ரம்ஜானும் தொடங்க உள்ளது.

பா.ஜ.க மீதான கேரள மக்களின் பாசம் இம்முறை மகத்தான மக்கள் ஆதரவாக மாறும் என்று நம்புகிறேன். கேரள வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் என உறுதியளிக்கிறேன். கேரளாவில்  தாமரை மலரப்போகிறது.

கடந்த 10 ஆண்டுகளில், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஈராக்கில்  போரில் சிக்கிய செவிலியர்களை அழைத்து வந்தோம். நெருக்கடிக்கு மத்தியில் சிக்கிய பாதிரியார்களை மீட்டு வந்தோம்.

கொரோனா காலத்தில் உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களுக்கு மத்திய அரசாங்கம் பாதுகாப்பாக இருந்தது.

கேரள கலாச்சாரம் ஆன்மிகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் UDF மற்றும் LDF இதை நசுக்குவதற்கு பெயர் பெற்றவை. கேரளாவின் கலாச்சாரம் அமைதியை ஊக்குவிக்கிறது. ஆனால் UDF மற்றும் LDF அரசியல் வன்முறையை நம்புகின்றன.

எல்.டி.எப் தங்க கடத்தல் மூலம் கொள்ளையடிப்பதில் பெயர் பெற்றது. யு.டி.எஃப்-ன்  சூரிய மின் சக்தி ஊழலுக்கு பெயர் பெற்றது.  கேரளாவில் ஊழல் மற்றும் திறமையற்ற அரசாங்கத்தால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.   LDF மற்றும் UDF அரசாங்கங்களின் சுழற்சியை உடைத்தால் மட்டுமே மக்கள் நிமமிதி அடைவார்கள் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: PM ModiKeralapm modi speechUDFLDF
ShareTweetSendShare
Previous Post

ஜெமினிக்கு கட்டுப்பாடுகளை விதித்த கூகுள் – காரணம் என்ன?

Next Post

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி திருத்தேரோட்டம்! – திரண்ட பக்தர்கள்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies