பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க முடியாமல் திணறும் எதிர்க்கட்சிகள் : அண்ணாமலை
Oct 21, 2025, 10:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க முடியாமல் திணறும் எதிர்க்கட்சிகள் : அண்ணாமலை

Web Desk by Web Desk
Apr 1, 2024, 03:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் திணறுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மருதமலை அடிவாரம், வடவள்ளி பேருந்து நிலையம், சுண்டப்பாளையம், வீரகேரளம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியின் சாமனிய மக்களுக்கான பத்தாண்டு கால நல்லாட்சியில், கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களை வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்து மீட்டிருக்கிறோம்.

உலகப் பொருளாதாரத்தில், 11வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்துக்கு  முன்னேறியிருக்கிறோம். தொழில் வளர்ச்சி, விவசாயம், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மேம்பாடு என, அனைத்துத் தரப்பினரும் முன்னேறும் திட்டங்களைச்  செயல்படுத்தியிருக்கிறோம். நாட்டின் உட்கட்டமைப்பை பல மடங்கு மேம்படுத்தி  இருக்கிறோம். வேகமாக வளரும் பொருளாதார நாடாக உயர்ந்திருக்கிறோம்.

திமுகவின் கடந்த 33 மாத கால ஆட்சிக்கு, நெகடிவ் மதிப்பெண்தான் கொடுக்க முடியும். ஆனால், நமது பாரதப் பிரதமர் 10 ஆண்டு கால நல்லாட்சியில், கொடுத்த அத்தனை தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டு, நாட்டை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல மக்கள் மத்தியில் நேர்மையாக, தைரியமாக மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்கிறோம். கோயம்புத்தூரில் எப்போதும் மோடி அலைதான் வீசிகொண்டிருக்கிறது.

வரும் பாராளுமன்றத் தேர்தல், வளர்ச்சிக்கான தேர்தல். அடுத்த ஐந்து ஆண்டுகளில், வளருகின்ற நாடாக இருக்கும் நமது இந்தியா, வளர்ந்த இந்தியாவாக, உலகின் முதன்மை நாடாக மாறப்போகிறது. நதி நீர் இணைப்பு உள்ளிட்ட 70 ஆண்டு காலமாக, அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்படாத முக்கியமான முடிவுகள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் எடுக்கப்படும்.

பாராளுமன்றத்தில், நமது பாரதப் பிரதமர் கரங்களை வலுப்படுத்த, 400 க்கும் அதிகமான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டும். எனவே, கோயம்புத்தூர், பொள்ளாச்சி பாராளுமன்றத் தொகுதிகளில், தாமரை சின்னத்துக்கு வாக்களித்து, நமது பாரதப் பிரதமருக்குத் துணை இருப்பதை, பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, நமது பிரதமர் மோடி போன்ற வலிமையான பிரதமர் வேட்பாளர் எதிர்க்கட்சி வரிசையில் யாரும் இல்லை. யார் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன.

கடந்த 20 ஆண்டுகளில், கோயம்புத்தூரின் வளர்ச்சி தேங்கி நிற்கிறது. குறிப்பாக, திமுகவின் அலட்சியத்தால், கோயம்புத்தூர் தனது பொலிவை இழந்து நிற்கிறது. கோயம்புத்தூரின் நீர்நிலைகள் வற்றிப் போகின்றன. சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு, திமுகவால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நமது பிரதமர் மோடி கொண்டு வரும் திட்டங்களைச் செயல்படுத்த, புதிய திட்டங்களைக் கேட்டுப் பெற, தொலை நோக்குச் சிந்தனை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தேவை.

கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு 1400 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியது. அவை முறையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதைக் கண்காணிக்க, கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தவறி விட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரால், கோயம்புத்தூரின் வளர்ச்சி பின்னோக்கிச் சென்றுவிட்டது.

கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி எதிர்கொள்ளும் பிரச்சினைகளான திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் மேலாண்மை, நொய்யல் நதி சீரமைப்பு, விமான நிலையம், ரயில் நிலையம், பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் என அனைத்தையும் நிறைவேற்ற, வனவிலங்கு-மனிதர்கள் மோதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, நொய்யல் நதியைச் சுத்தப்படுத்த, பிரதமர் மோடி ரூ.970 கோடி வழங்கியுள்ளார். ஆனால், திமுக அரசு, நொய்யல் நதியைச் சுத்தம் செய்துள்ளதா? அம்ருத் 2.0 திட்டத்தை, கலைஞர் நூற்றாண்டு திட்டம் என்று ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார்கள். இதுபோன்று அரைகுறையாக அல்லாமல், நொய்யல் நதியை முழுமையாக மீட்டெடுக்க, பிரதமரின் வளர்ச்சித் திட்டங்கள் முழுமையாகக் கிடைக்க, புதிய திட்டங்களைக் கேட்டுப் பெற, நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டும்.

1980களில் தொடங்கிய வீரகேரளம் ஹவுசிங் போர்டு பிரச்சினை மற்றும், பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் ஆகிய இரண்டு பிரச்சினைகளையும், கடந்த 2009 ஆம் ஆண்டு, தொண்டாமுத்தூர் இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், மூன்று மாதங்களில் தீர்ப்போம் என்று கூறினார்.

15 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் அவற்றிற்கு தீர்வு கிடைக்கவில்லை.
பாஜக சார்பில், கோயம்புத்தூரின் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், திமுக அரசுடன் சண்டை போட்டாவது, இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் நாங்கள் தீர்வினைப் பெற்றுத் தருவோம் என்று உறுதி அளிக்கிறேன்.

வரும் பாராளுமன்றத் தேர்தல், தேசியத் தேர்தல். நாட்டின் வளர்ச்சிக்கான, நாட்டின் பாதுகாப்புக்கான தேர்தல். பெருமளவில், தன்னார்வலர்கள், பொதுமக்கள், அரசியலுக்குச் சம்பந்தமில்லாதவர்கள், அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தவர்கள் என அனைவரும் எழுச்சியுடன் நமது பிரதமர் மோடிக்காக களத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ள தேர்தலில், கட்சி வேறுபாடின்றி, வளர்ச்சியின் சின்னமாம் தாமரை சின்னத்துக்கு வாக்களித்து, அண்ணாமலையாகிய என்னை, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: annamalaiDMKkovaicoimbatoreannamalai campignpm candidate
ShareTweetSendShare
Previous Post

பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஹோட்டல் குண்டு வெடிப்பு! – சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் முகாம்!

Next Post

புதிய உச்சம்: மார்ச் மாதத்தில் 86.82 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்!

Related News

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

வங்க கடலில் புயல் உருவாகுமா? -வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பேட்டி!

மெக்சிகோ வெடித்து சிதறிய பாப்போகாடெபெடல் எரிமலை – டைம் லாப்ஸ் வீடியோ!

எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies