பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க முடியாமல் திணறும் எதிர்க்கட்சிகள் : அண்ணாமலை
Jan 14, 2026, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க முடியாமல் திணறும் எதிர்க்கட்சிகள் : அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Apr 1, 2024, 03:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் திணறுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மருதமலை அடிவாரம், வடவள்ளி பேருந்து நிலையம், சுண்டப்பாளையம், வீரகேரளம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியின் சாமனிய மக்களுக்கான பத்தாண்டு கால நல்லாட்சியில், கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களை வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்து மீட்டிருக்கிறோம்.

உலகப் பொருளாதாரத்தில், 11வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்துக்கு  முன்னேறியிருக்கிறோம். தொழில் வளர்ச்சி, விவசாயம், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மேம்பாடு என, அனைத்துத் தரப்பினரும் முன்னேறும் திட்டங்களைச்  செயல்படுத்தியிருக்கிறோம். நாட்டின் உட்கட்டமைப்பை பல மடங்கு மேம்படுத்தி  இருக்கிறோம். வேகமாக வளரும் பொருளாதார நாடாக உயர்ந்திருக்கிறோம்.

திமுகவின் கடந்த 33 மாத கால ஆட்சிக்கு, நெகடிவ் மதிப்பெண்தான் கொடுக்க முடியும். ஆனால், நமது பாரதப் பிரதமர் 10 ஆண்டு கால நல்லாட்சியில், கொடுத்த அத்தனை தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டு, நாட்டை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல மக்கள் மத்தியில் நேர்மையாக, தைரியமாக மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்கிறோம். கோயம்புத்தூரில் எப்போதும் மோடி அலைதான் வீசிகொண்டிருக்கிறது.

வரும் பாராளுமன்றத் தேர்தல், வளர்ச்சிக்கான தேர்தல். அடுத்த ஐந்து ஆண்டுகளில், வளருகின்ற நாடாக இருக்கும் நமது இந்தியா, வளர்ந்த இந்தியாவாக, உலகின் முதன்மை நாடாக மாறப்போகிறது. நதி நீர் இணைப்பு உள்ளிட்ட 70 ஆண்டு காலமாக, அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்படாத முக்கியமான முடிவுகள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் எடுக்கப்படும்.

பாராளுமன்றத்தில், நமது பாரதப் பிரதமர் கரங்களை வலுப்படுத்த, 400 க்கும் அதிகமான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டும். எனவே, கோயம்புத்தூர், பொள்ளாச்சி பாராளுமன்றத் தொகுதிகளில், தாமரை சின்னத்துக்கு வாக்களித்து, நமது பாரதப் பிரதமருக்குத் துணை இருப்பதை, பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, நமது பிரதமர் மோடி போன்ற வலிமையான பிரதமர் வேட்பாளர் எதிர்க்கட்சி வரிசையில் யாரும் இல்லை. யார் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன.

கடந்த 20 ஆண்டுகளில், கோயம்புத்தூரின் வளர்ச்சி தேங்கி நிற்கிறது. குறிப்பாக, திமுகவின் அலட்சியத்தால், கோயம்புத்தூர் தனது பொலிவை இழந்து நிற்கிறது. கோயம்புத்தூரின் நீர்நிலைகள் வற்றிப் போகின்றன. சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு, திமுகவால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நமது பிரதமர் மோடி கொண்டு வரும் திட்டங்களைச் செயல்படுத்த, புதிய திட்டங்களைக் கேட்டுப் பெற, தொலை நோக்குச் சிந்தனை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தேவை.

கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு 1400 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியது. அவை முறையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதைக் கண்காணிக்க, கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தவறி விட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரால், கோயம்புத்தூரின் வளர்ச்சி பின்னோக்கிச் சென்றுவிட்டது.

கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி எதிர்கொள்ளும் பிரச்சினைகளான திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் மேலாண்மை, நொய்யல் நதி சீரமைப்பு, விமான நிலையம், ரயில் நிலையம், பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் என அனைத்தையும் நிறைவேற்ற, வனவிலங்கு-மனிதர்கள் மோதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, நொய்யல் நதியைச் சுத்தப்படுத்த, பிரதமர் மோடி ரூ.970 கோடி வழங்கியுள்ளார். ஆனால், திமுக அரசு, நொய்யல் நதியைச் சுத்தம் செய்துள்ளதா? அம்ருத் 2.0 திட்டத்தை, கலைஞர் நூற்றாண்டு திட்டம் என்று ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார்கள். இதுபோன்று அரைகுறையாக அல்லாமல், நொய்யல் நதியை முழுமையாக மீட்டெடுக்க, பிரதமரின் வளர்ச்சித் திட்டங்கள் முழுமையாகக் கிடைக்க, புதிய திட்டங்களைக் கேட்டுப் பெற, நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டும்.

1980களில் தொடங்கிய வீரகேரளம் ஹவுசிங் போர்டு பிரச்சினை மற்றும், பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் ஆகிய இரண்டு பிரச்சினைகளையும், கடந்த 2009 ஆம் ஆண்டு, தொண்டாமுத்தூர் இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், மூன்று மாதங்களில் தீர்ப்போம் என்று கூறினார்.

15 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் அவற்றிற்கு தீர்வு கிடைக்கவில்லை.
பாஜக சார்பில், கோயம்புத்தூரின் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், திமுக அரசுடன் சண்டை போட்டாவது, இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் நாங்கள் தீர்வினைப் பெற்றுத் தருவோம் என்று உறுதி அளிக்கிறேன்.

வரும் பாராளுமன்றத் தேர்தல், தேசியத் தேர்தல். நாட்டின் வளர்ச்சிக்கான, நாட்டின் பாதுகாப்புக்கான தேர்தல். பெருமளவில், தன்னார்வலர்கள், பொதுமக்கள், அரசியலுக்குச் சம்பந்தமில்லாதவர்கள், அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தவர்கள் என அனைவரும் எழுச்சியுடன் நமது பிரதமர் மோடிக்காக களத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ள தேர்தலில், கட்சி வேறுபாடின்றி, வளர்ச்சியின் சின்னமாம் தாமரை சின்னத்துக்கு வாக்களித்து, அண்ணாமலையாகிய என்னை, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: annamalai campignpm candidateannamalaiDMKkovaicoimbatore
ShareTweetSendShare
Previous Post

பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஹோட்டல் குண்டு வெடிப்பு! – சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் முகாம்!

Next Post

புதிய உச்சம்: மார்ச் மாதத்தில் 86.82 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்!

Related News

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies