மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்!
Mar 15, 2026, 07:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்!

Murugesan M by Murugesan M
Apr 4, 2024, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, செம்மங்குளம் அருகே இரவு நேரத்தில்  சிறுத்தை நடமாடியதை சிலர் பார்த்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக, போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், அப்பகுதியில் இருந்த கால்தடங்களை ஆய்வு செய்து, அது சிறுத்தையின் கால்தடம் என்பதை உறுதி செய்தனர்.

மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவிலும், சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகி இருந்தது. சிறுத்தை நடமாட்டத்தால், அப்பகுதி பொதுமக்கள் அச்சம்  அடைந்துள்ளனர்.  விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு, சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து  சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தை பார்த்தால், 9360889724 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிறுத்தை நடமாட்டத்தால் மாணவர்களின் நலன் கருதி மயிலாடுதுறையில் உள்ள 7 பள்ளிகளுக்கு வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டார். மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலம், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருவதாகவும், விரைவில் சிறுத்தையை பிடித்து விடுவோம் என்றும் கூறியுள்ளார்.

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்புத் துறை, வனத்துறை பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், வனத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, 10 குழுக்கள் அமைத்து சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Tags: @forestMayiladuthuraicheetahschool leaveCCTV Camera
ShareTweetSendShare
Previous Post

விவசாயிகளின் நண்பன் பிரதமர் நரேந்திர மோடி !

Next Post

ஏப். 8-ல் சூரிய கிரகணம் : நயாகராவில் அவசர நிலை பிரகடனம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies