இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் பிர்ச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பாகிஸ்தான் மண்ணில் சுட்டுக்கொன்றதாக அந்நாடு குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்நிலையில் தங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்ததை மூலம் தீர்வு காண வேண்டும் என இருநாடுகளுக்கும் அமெரிக்க அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், இந்த பிர்ச்சினை தொடர்பாக வந்த செய்திகளை பார்த்தோம். ஆனால் இந்தியா மீது பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை.
இருப்பினும் இருநாடுகளும் தங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார்.