ஜார்க்கண்ட் மாநில அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள்! - நடந்தது என்ன?
Oct 3, 2025, 04:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்க்கண்ட் மாநில அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள்! – நடந்தது என்ன?

Web Desk by Web Desk
May 6, 2024, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்க்கண்ட் மாநில அமைச்சரின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சோதனையின் போது, கைப்பற்றப்பட்ட பணத்தை அதிகாரிகள் ஒரு அறையில் மணல் கொட்டுவது போல் கொட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அலாம்கிரின் தனி செயலாளருடைய உதவியாளர் சஞ்சீவ்லால். இவரது வீட்டில் வருமான வரிக் கணக்கில் காட்டாமல் பதுக்கி வைத்திருந்த கோடிக்கணக்கான பணம், அமலாக்கத்துறை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் விரைவில் எண்ணப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனையில் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே கடந்த ஆண்டு தொடக்கத்தில், ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித் துறையின் தலைமைப் பொறியாளர் வீரேந்திர கே. ராம், அரசு திட்டங்களைச் செயல்படுத்துவதில் முறைகேடுகள் செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக, ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் மற்றும் ஜார்கண்ட், பீகார் மற்றும் டெல்லியில் உள்ளபல இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, பணமோசடி செய்ததாக வீரேந்திர கே. ராமை, சட்ட விரோத பணபரிமாற்ற மோசடி வழக்கில் 2023ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி கைது செய்தது.

வீரேந்திர ராம் வழக்கு விசாரணையின் ஒரு கட்டமாக , ஜார்க்கண்டின் ராஞ்சியில் பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனைகளை மேற்கொண்டது.

இதில், அமைச்சரின் தனிச்செயலாளரின் உதவியாளர் சஞ்சீவ் லால் வீட்டில் இருந்து கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சி அமைச்சர் அலாம்கிரின் தனிப்பட்ட செயலாளரான சஞ்சீவ் லாலுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் அறையில் பணம் கொட்டி கிடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இது தொடர்பாக, ஜார்க்கண்ட் மாநில பாஜக செய்தி தொடர்பாளர் பிரதுஷ் கூறும் போது, காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் இருந்து கடந்த ஓராண்டில் மட்டும் 300 கோடி ரூபாய் பணத்தை அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளதை சுட்டிக்காட்டினார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி ஆகிய கட்சிகள், ஜார்க்கண்ட் மாநிலத்தை கொள்ளையடித்து விட்டனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.

இந்த சம்பவம் தொடர்பாக, மணிலா அரசும் , ஆளும் கட்சி அமைச்சர்களும் எதுவும் தெரிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Jharkhand State Minister's Assistant's house with currency notes! - what happened?
ShareTweetSendShare
Previous Post

598 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்த மகாலட்சுமி!

Next Post

கடல் அலையில் சிக்கி 5 கல்லூரி மாணவர்கள் பலி: அண்ணாமலை இரங்கல்!

Related News

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் காட்டு யானை – பக்தர்கள் அச்சம்!

அமெரிக்கா : வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பூனை!

மயிலாடுதுறை : சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் – இன்று முதல் போக்குவரத்திற்கு தடை!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வரலாற்றில் பதிய வேண்டிய ஆப்ரேஷன் சிந்தூர் : விமானப்படை தளபதி ஏ.பி.சிங் பெருமிதம்!

எத்தியோப்பியாவில் உள்ள தேவாலயத்தில் சாரம் விழுந்து 36 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கு நெருக்கடி?

மத்திய பிரதேசம் – இருமல் மருந்தால் 11 குழந்தைகள் பலி – அதிகாரிகள் ஆய்வு!

ஏற்காடு மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

விண்வெளியில் 4-வது திருமணம் செய்யும் டாம் க்ரூஸ்?

கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா!

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர்கள் போராட்டம்!

விஜயதசமியையொட்டி ராவணன் வதம் நிகழ்ச்சி!

எனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அமெரிக்காவுக்கே பெரிய அவமானம் – அதிபர் டிரம்ப்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies