ஜார்க்கண்ட் மாநில அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள்! - நடந்தது என்ன?
Jun 14, 2026, 10:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்க்கண்ட் மாநில அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள்! – நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
May 6, 2024, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்க்கண்ட் மாநில அமைச்சரின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சோதனையின் போது, கைப்பற்றப்பட்ட பணத்தை அதிகாரிகள் ஒரு அறையில் மணல் கொட்டுவது போல் கொட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அலாம்கிரின் தனி செயலாளருடைய உதவியாளர் சஞ்சீவ்லால். இவரது வீட்டில் வருமான வரிக் கணக்கில் காட்டாமல் பதுக்கி வைத்திருந்த கோடிக்கணக்கான பணம், அமலாக்கத்துறை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் விரைவில் எண்ணப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனையில் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே கடந்த ஆண்டு தொடக்கத்தில், ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித் துறையின் தலைமைப் பொறியாளர் வீரேந்திர கே. ராம், அரசு திட்டங்களைச் செயல்படுத்துவதில் முறைகேடுகள் செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக, ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் மற்றும் ஜார்கண்ட், பீகார் மற்றும் டெல்லியில் உள்ளபல இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, பணமோசடி செய்ததாக வீரேந்திர கே. ராமை, சட்ட விரோத பணபரிமாற்ற மோசடி வழக்கில் 2023ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி கைது செய்தது.

வீரேந்திர ராம் வழக்கு விசாரணையின் ஒரு கட்டமாக , ஜார்க்கண்டின் ராஞ்சியில் பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனைகளை மேற்கொண்டது.

இதில், அமைச்சரின் தனிச்செயலாளரின் உதவியாளர் சஞ்சீவ் லால் வீட்டில் இருந்து கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சி அமைச்சர் அலாம்கிரின் தனிப்பட்ட செயலாளரான சஞ்சீவ் லாலுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் அறையில் பணம் கொட்டி கிடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இது தொடர்பாக, ஜார்க்கண்ட் மாநில பாஜக செய்தி தொடர்பாளர் பிரதுஷ் கூறும் போது, காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் இருந்து கடந்த ஓராண்டில் மட்டும் 300 கோடி ரூபாய் பணத்தை அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளதை சுட்டிக்காட்டினார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி ஆகிய கட்சிகள், ஜார்க்கண்ட் மாநிலத்தை கொள்ளையடித்து விட்டனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.

இந்த சம்பவம் தொடர்பாக, மணிலா அரசும் , ஆளும் கட்சி அமைச்சர்களும் எதுவும் தெரிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Jharkhand State Minister's Assistant's house with currency notes! - what happened?
ShareTweetSendShare
Previous Post

598 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்த மகாலட்சுமி!

Next Post

கடல் அலையில் சிக்கி 5 கல்லூரி மாணவர்கள் பலி: அண்ணாமலை இரங்கல்!

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies