ஜார்க்கண்ட் மாநில அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள்! - நடந்தது என்ன?
Sep 13, 2026, 11:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்க்கண்ட் மாநில அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள்! – நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
May 6, 2024, 07:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜார்க்கண்ட் மாநில அமைச்சரின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சோதனையின் போது, கைப்பற்றப்பட்ட பணத்தை அதிகாரிகள் ஒரு அறையில் மணல் கொட்டுவது போல் கொட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அலாம்கிரின் தனி செயலாளருடைய உதவியாளர் சஞ்சீவ்லால். இவரது வீட்டில் வருமான வரிக் கணக்கில் காட்டாமல் பதுக்கி வைத்திருந்த கோடிக்கணக்கான பணம், அமலாக்கத்துறை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் விரைவில் எண்ணப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனையில் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே கடந்த ஆண்டு தொடக்கத்தில், ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித் துறையின் தலைமைப் பொறியாளர் வீரேந்திர கே. ராம், அரசு திட்டங்களைச் செயல்படுத்துவதில் முறைகேடுகள் செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக, ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் மற்றும் ஜார்கண்ட், பீகார் மற்றும் டெல்லியில் உள்ளபல இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, பணமோசடி செய்ததாக வீரேந்திர கே. ராமை, சட்ட விரோத பணபரிமாற்ற மோசடி வழக்கில் 2023ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி கைது செய்தது.

வீரேந்திர ராம் வழக்கு விசாரணையின் ஒரு கட்டமாக , ஜார்க்கண்டின் ராஞ்சியில் பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனைகளை மேற்கொண்டது.

இதில், அமைச்சரின் தனிச்செயலாளரின் உதவியாளர் சஞ்சீவ் லால் வீட்டில் இருந்து கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சி அமைச்சர் அலாம்கிரின் தனிப்பட்ட செயலாளரான சஞ்சீவ் லாலுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் அறையில் பணம் கொட்டி கிடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இது தொடர்பாக, ஜார்க்கண்ட் மாநில பாஜக செய்தி தொடர்பாளர் பிரதுஷ் கூறும் போது, காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் இருந்து கடந்த ஓராண்டில் மட்டும் 300 கோடி ரூபாய் பணத்தை அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளதை சுட்டிக்காட்டினார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி ஆகிய கட்சிகள், ஜார்க்கண்ட் மாநிலத்தை கொள்ளையடித்து விட்டனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.

இந்த சம்பவம் தொடர்பாக, மணிலா அரசும் , ஆளும் கட்சி அமைச்சர்களும் எதுவும் தெரிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Jharkhand State Minister's Assistant's house with currency notes! - what happened?
Share
Tweet
SendShare
Previous Post

598 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்த மகாலட்சுமி!

Next Post

கடல் அலையில் சிக்கி 5 கல்லூரி மாணவர்கள் பலி: அண்ணாமலை இரங்கல்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies