முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவை உடலை காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்க அக்கட்சி தலைமை அனுமதி மறுத்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் கரீம் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பாஜக தேசத்திற்கு முன்னுரிமை அளித்து செயல்படுவதாகவும், ஆனால் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் தங்கள் குடும்பத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தார்.
வாரிசு அரசியல் காரணமாக முன்னாள் பிரதமர் நரசிம்மராவை காங்கிரஸ் தலைமை தொடர்ந்து அவமதித்த வந்ததாகவும், அவர் இறந்த பிறகு கூட அவரது உடலை காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்க அக்கட்சி தலைமை அனுமதி மறுத்ததாக தெரிவித்தார். ஆனால் நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி பாஜக கௌரவித்ததாகவும் அவர் கூறினார்.
தெலங்கானா முதல் டெல்லி வரை ‘டபுள் ஆர்’ வரி குறித்து நிறைய விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும், ராகுல் காந்தி மற்றும் ரேவந்த் ரெட்டியை மறைமுகமாக பிரதமர் குறிப்பிட்டார்.
ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்ததை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி ஆனால் ஆர்ஆர் வரி வசூல் மூலம் ஆட்சி அமைந்த சில மாதங்களில் அந்த தொகையை அவர்கள் நெருங்கி வருவதாகவும் கூறினார்.