முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் அமைச்சரவை எடுத்த முடிவுகள் அடங்கிய காகிதத்தை கிழித்து எறிந்தவர் காங்கிரஸ் இளவரசர் என ராகுல் காந்தியை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார்.
ஒடிஸா மாநிலம் பார்கர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ராகுல் காந்தி கிழித்து எறிந்தது வெறும் காகிதம் அல்ல, அரசியலமைப்புச் சட்டம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், அதே ராகுல் காந்திதான் இன்றைக்கு அரசியலமைப்புச் சட்டத்தை தலையில் தூக்கிக் கொண்டு திரிவதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார்.