ஜம்மு-காஷ்மீரில் ரத்து செய்யப்பட்ட 370-ஆவது அரசியலமைப்பு சட்டப் பிரிவை மீண்டும் கொண்டு வர காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் திட்டமிடுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரில் பிரசாரம் செய்த அவர், இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்றதும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ பிரதமர் மோடி நீக்கியதாக தெரிவித்தார்.
காஷ்மீரில் பயங்கரவதாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, அதை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக பிரதமர் மோடி மாற்றியதாகவும், மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 370-ஆவது சட்டப் பிரிவை மீண்டும் அமல்படுத்துவோம் என இளவரசர்களான அகிலேஷ் யாதவும், ராகுல் காந்தியும் தெரிவிப்பதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.
தங்கள் வாக்கு வங்கியை எண்ணி எதிர்க்கட்சிகள் அச்சத்தில் இருப்பதாகவும், பாஜகவுக்கு யாரை பற்றியும் பயமில்லை என்றும் அமித் ஷா குறிப்பிட்டார். ராமர் கோவில் மட்டுமல்லாமல், முகலாய மன்னர் அவுரங்கசீஃப்பால் அழிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் ஆலய நடைபாதையையும் பிரதமர் மோடி சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததாக அமித் ஷா கூறினார். இண்டியா கூட்டணி தேர்தலில் வென்றால், பிரதமர் வேட்பாளர் யார் என்றும் எதிர்க்கட்சிகளுக்கு அமித் ஷா கேள்வி எழுப்பினார்.