அக்னிபத் திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி மீது பாஜக தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளது.
பிரதமர் மோடி ராணுவ வீரர்களிடையே இரு பிரிவுகளை உருவாக்கி வைத்திருப்பதாக ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசினார். இந்தப் பேச்சு தொடர்பாக, மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், அர்ஜூன் ராம் மேக்வால், ராஜீவ் சந்திரசேகர், கிஷன் ரெட்டி ஆகியோர், ராகுல்காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளனர்.
இது வெறும் தேர்தல் பிரச்சனையல்ல – தேசத்தின் பிரச்சனை என கூறியுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ராகுல்காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.