கர்நாடகாவில் ஒரே இரவில் ஓபிசி இடஒதுக்கீட்டைப் பறித்து இஸ்லாமிகளுக்கு காங்கிரஸ் அரசு வழங்கியதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ஹமீர்புரில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், கர்நாடகத்தில் ஓபிசி இடஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் அரசு வழங்கியதால், பிற்படுத்தப்பட்டோர் பாதிக்கப்பட்டதாகக் கூறினார்.
மேலும், இதை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாக கூறிய பிரதமர், இந்தப் பாவத்தை செய்வதற்கு காங்கிரசுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் அனுமதி அளிப்பீர்களா என பொதுமக்களிடம் கேள்வி எழுப்பினார்.
அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி, எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி-களுக்கான ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டையும் இஸ்லாமியர்களுக்கு வழங்க காங்கிரஸ் விரும்புவதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார்.