உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் ஏறுவதற்கு மலையேற்ற வீரர்களிடையே போட்டா போட்டி நிலவுகிறது.
கடல் மட்டத்திலிருந்து 8,848 மீட்டர் உயரத்தில் உள்ளது எவரெஸ்ட் சிகரம்.
இதன் உச்சியை அடைய முயன்ற பீட்டர்சன் மற்றும் அவரது வழிகாட்டி பஸ்தேஞ்சி செர்பா ஆகியோர் சமீபத்தில் பனிச்சறுக்கினால் உயிரிழக்க நேரிட்டது.
என்றாலும், எவரெஸ்டில் ஏறுவதற்காக வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையவில்லை.
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் எவரெஸ்டில் ஏறுவதற்கு குவிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.