மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது யார் என மேற்கு வங்கத்தில் யாரிடம் கேட்டாலும், பாஜக-தான் என்று யோசிக்காமல் கூறுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூர் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அனிர்பன் கங்குலியை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசயவர்,
திரிணாமுல் காங்கிரஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் வெவ்வேறு கட்சிகள் என்றாலும், அவற்றின் நோக்கம் ஒன்றுதான் எனக் குறிப்பிட்டார். இண்டியா கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்கனவே அறிவித்துள்ளதால், இடதுசாரி கட்சிகளுக்கு வாக்களிப்பது திரிணாமுல் காங்கிரசுக்கு மட்டுமே உதவும் என்றும் அவர் கூறினார்.
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியே அமையும் என்பதை மக்கள் அறிவார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, திரிணாமுல் காங்கிரஸுக்கு வாக்களித்து வாக்குகளை வீணடிக்க வேண்டாம் என்றும் கூறினார்.
முன்னதாக, பராசத் தொகுதிக்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியில் வாகனப் பேரணியில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசு ஏற்கனவே 17 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் பணத்தை மீட்டுள்ளதாகவும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசால் மோசடி செய்யப்பட்ட 3 ஆயிரம் கோடி ரூபாய் நிச்சயம் மக்களுக்குத் திருப்பியளிக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.