மக்களவைத் தேர்தலில் வாக்குகள் பிரிந்ததன் காரணமாகவே திமுகவினர் வெற்றி பெற்றிருக்கின்றனர் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் அமைக்கப்பட்ட மக்கள் தொடர்பு அலுவலகத்தை, பாஜக மூத்த தலைவர் தமிழிசை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய தமிழிசை,
தமிழகத்தில் 2026-ம் ஆண்டுக்கான தேர்தல் களம் பாஜகவினருக்கானது எனவும், வாக்குகள் பிரிந்ததன் காரணமாகவே திமுகவினர் வெற்றி பெற்றிருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
தேச விரோத கருத்துகளை பேசும் சீமான் போன்றோரை பின் தொடர்வதற்கு பதிலாக இளைஞர்கள் தேசிய கட்சிகளை நோக்கி வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் மாநில தலைவர் அண்ணாமலையை மோசமாக சித்தரித்து ஆட்டின் தலையை வெட்டி பலி கொடுக்கப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனமும் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தின் அரசியல் களத்திலேயே நான் இருப்பேன் எனவும், விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனும் பிரேமலதாவின் கருத்தில் ஒத்துப்போவதாகவும் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்தார்.