பிரிட்டனில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு வசிக்கும் இந்துக்கள் கோரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
பிரிட்டனில் ஜூலை 4 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் 32 பக்கங்களை கொண்ட கோரிக்கை அறிக்கையை முதன்முறையாக இந்துக்கள் வெளியிட்டுள்ளனர்.
இதற்கு 4 வேட்பாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.மத வெறுப்பு குற்றமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், இந்துக்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோர் மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிரான சம்பவங்களை கண்காணித்து தடைசெய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.